1. முதற்பகவன் வழுத்து
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. (1)
நெடுங்கணக்கில் (அல்லது குறுங்கணக்கில்) உள்ள எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாக உடையன. அது போல உலகம் முற்பகவனை முதலாக உடையது.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். (2)
தூய அறிவையுடைய இறைவனின் நல்ல திருவடிகளைத் தொழதவராயின் நூல்களைக் கற்றவர்க்கு அக் கல்வியால் உண்டான பயன் யாதாம்?
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். (3)
அடியாரின் உள்ளத்தாமரை மலரின் கண்ணே அவர் நினைத்தமட்டில் விரைந்து சென்று அமரும் இறைவனின் மாட்சியமைப்பட்ட அடிகளை அடைந்தவர் எல்லா உலகிற்கும் மேலான வீட்டுலகின்கண் நிலையாக வாழ்வர்.
வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. (4)
விருப்பு வெறுப்பு இல்லாத இறைவன் அடியைச் சேர்ந்தவர்க்கு எங்கும் எக்காலத்தும் துன்பம் இல்லை.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (5)
இறைவனின் மெய்யான புகழை விரும்பினாரிடத்து மயக்கஞ் செய்யும் நல்வினை தீவினை என்னும் இருவினையும் இல்லாதனவாகும்.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். (6)
மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளையும் வழியாகக் கொண்ட ஐவகை ஆசைகளையும் விட்ட இறைவனது மெய்யான ஒழுக்க நெறியில் ஒழுகினவர் வீட்டுலகில் என்றும் இன்புற்று வாழ்வார்.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. (7)
ஒரு வகையாலும் தனக்கு ஒப்பில்லாத இறைவனுடைய திருவடிகளை அடைந்தார்க்கு அல்லாமல் மனத்தின்கண் நிகழுந் துன்பங்களையும் அவற்றால் ஏற்படும் கவலையையும் நீக்குதல் இயலாது.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. (8)
அறக்கடல் வடிவினனும் அழகிய குளிர்ந்த அருளாளனும் ஆகிய இறைவனது திருவடியாகிய பனையைச் சேர்ந்தார்க்கல்லது அதனொடு சேர்ந்த பிறவாகிய பொருளின் இன்பக் கடல்களைக் கடத்தல் இயலாததாகும்.
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. (9)
எண்வகைப்பட்ட குணங்களையுடைய இறைவனின் திருவடிகளை வணங்காத தலைகள் தத்தம் பலன்களைக் கொள்ளாத பொறிகளைப் போலப் பயன்படாதன வாகும்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். (10)
இறைவன் திருவடிçயாகிய புணையைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடப்பர். அப் புணையைச் சேராதவர் அக் கடலைக் கடவாதவராய் அதனுள் அழுந்துவர்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. (1)
நெடுங்கணக்கில் (அல்லது குறுங்கணக்கில்) உள்ள எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாக உடையன. அது போல உலகம் முற்பகவனை முதலாக உடையது.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். (2)
தூய அறிவையுடைய இறைவனின் நல்ல திருவடிகளைத் தொழதவராயின் நூல்களைக் கற்றவர்க்கு அக் கல்வியால் உண்டான பயன் யாதாம்?
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். (3)
அடியாரின் உள்ளத்தாமரை மலரின் கண்ணே அவர் நினைத்தமட்டில் விரைந்து சென்று அமரும் இறைவனின் மாட்சியமைப்பட்ட அடிகளை அடைந்தவர் எல்லா உலகிற்கும் மேலான வீட்டுலகின்கண் நிலையாக வாழ்வர்.
வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. (4)
விருப்பு வெறுப்பு இல்லாத இறைவன் அடியைச் சேர்ந்தவர்க்கு எங்கும் எக்காலத்தும் துன்பம் இல்லை.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (5)
இறைவனின் மெய்யான புகழை விரும்பினாரிடத்து மயக்கஞ் செய்யும் நல்வினை தீவினை என்னும் இருவினையும் இல்லாதனவாகும்.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். (6)
மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளையும் வழியாகக் கொண்ட ஐவகை ஆசைகளையும் விட்ட இறைவனது மெய்யான ஒழுக்க நெறியில் ஒழுகினவர் வீட்டுலகில் என்றும் இன்புற்று வாழ்வார்.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. (7)
ஒரு வகையாலும் தனக்கு ஒப்பில்லாத இறைவனுடைய திருவடிகளை அடைந்தார்க்கு அல்லாமல் மனத்தின்கண் நிகழுந் துன்பங்களையும் அவற்றால் ஏற்படும் கவலையையும் நீக்குதல் இயலாது.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. (8)
அறக்கடல் வடிவினனும் அழகிய குளிர்ந்த அருளாளனும் ஆகிய இறைவனது திருவடியாகிய பனையைச் சேர்ந்தார்க்கல்லது அதனொடு சேர்ந்த பிறவாகிய பொருளின் இன்பக் கடல்களைக் கடத்தல் இயலாததாகும்.
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. (9)
எண்வகைப்பட்ட குணங்களையுடைய இறைவனின் திருவடிகளை வணங்காத தலைகள் தத்தம் பலன்களைக் கொள்ளாத பொறிகளைப் போலப் பயன்படாதன வாகும்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். (10)
இறைவன் திருவடிçயாகிய புணையைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடப்பர். அப் புணையைச் சேராதவர் அக் கடலைக் கடவாதவராய் அதனுள் அழுந்துவர்.