27. தவம்
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு. (261)
இயற்கையாகவுஞ் செயற்கையாகவும் தமக்கு நேருந் துன்பங்களை யல்லாம் பொறுத்துக் கொள்ளுதலும், பிற உயிர்கட்குத் துன்பஞ் செய்யாமையும் ஆகிய அவ்வளவே தவத்தின் வடிவாம்.
தவமும் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது. (262)
தவப் பயனன்றித் தவ முயற்சியும் முற்பிறப்பில் தவஞ் செய்தவர்க்கே உண்டாகும். அத்தவத்தை முற்பிறப்பில் ஓரளவேனுஞ் செய்யாதார் இப்பிறப்பில் முயல்வது பயனில் முயற்சியாம்.
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம். (263)
துறவியர் அல்லாத மற்ற இல்லறத்தார் துறவியர்க்கு ஊன் உடையும் உறையுளும் மருந்தும் முதலிய கொடுத்து உதவுதலை விரும்பியே, தாம் தவஞ் செய்தலை மறந்தார் போலும்.
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும். (264)
அறியாமையால் தமக்கு மாறாக வந்த வலியோரையுந் தீயோரையும் சாவித்தலும் அறிந்ததினால் தம்மை விரும்பித் தம் உதவி நாடி வந்த எளியோரை வாழ்வித்தலும் தவத்தோர் கருதுவாராயின் அவர் தவ வலிமையால் அவை கூடும்.
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும். (265)
தவத்தின் பயனாக மறுமையில் தாம் விரும்பிய பேறுகளை யயல்லாம் விரும்பி யவாறே பெறக்கூடிய நிலைமை இருத்தலால் செய்ய வேண்டி தவம் இம்மையில் அறிவுடையோரால் முயன்று செய்யப்படும்.
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. (266)
உலகப் பற்றைத் துறந்து தவஞ் செய்வாரே தம் கருமத்தைச் செய்பவராவர். அவரல்லாதார் பிறவிக்கு ஏதுவான பொருள் இன்ப ஆசை வலையுள் அகப்பட்டுத் தமக்குக் கேடு செய்பவரேயாவர்.
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. (267)
உருக்கப்படும் பொன் தீத் தன்னைச் சுடச்சுடத் தன் மாசு மறு நீங்கி ஒளி மிகுவது போலத் தவஞ் செய்ய வல்லவர்க்கு அதனால் வருந் துன்பம் தம்மை வருத்த வருத்தத் தம் தீவினைத் தன்மையும் நீங்கித் தெள்ளறிவு மிகும்.
தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாந் தொழும். (268)
தன் உயிரைத் தனக்கு முற்றுரிமையாகப் பெற்றவனை அங்ஙனம் பெறாத மற்ற மக்களெல்லாம் கைகூப்பி வணங்குவர்.
கூற்றங் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. (269)
தவத்தால் வரும் ஆற்றலைப் பெற்றவர்க்குக் கூற்றுவனை வெல்வதுங் கூடுவதாம்.
இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர். (270)
இவ்வுலகத்திற் செல்வர் சிலராகவும் வறியர் பலராகவும் இருந்ததற்குக் கரணியம், தவஞ் செய்வார் சிலராகவும் அது செய்யாதவர் பலராகவும் இருத்தலே.
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு. (261)
இயற்கையாகவுஞ் செயற்கையாகவும் தமக்கு நேருந் துன்பங்களை யல்லாம் பொறுத்துக் கொள்ளுதலும், பிற உயிர்கட்குத் துன்பஞ் செய்யாமையும் ஆகிய அவ்வளவே தவத்தின் வடிவாம்.
தவமும் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது. (262)
தவப் பயனன்றித் தவ முயற்சியும் முற்பிறப்பில் தவஞ் செய்தவர்க்கே உண்டாகும். அத்தவத்தை முற்பிறப்பில் ஓரளவேனுஞ் செய்யாதார் இப்பிறப்பில் முயல்வது பயனில் முயற்சியாம்.
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம். (263)
துறவியர் அல்லாத மற்ற இல்லறத்தார் துறவியர்க்கு ஊன் உடையும் உறையுளும் மருந்தும் முதலிய கொடுத்து உதவுதலை விரும்பியே, தாம் தவஞ் செய்தலை மறந்தார் போலும்.
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும். (264)
அறியாமையால் தமக்கு மாறாக வந்த வலியோரையுந் தீயோரையும் சாவித்தலும் அறிந்ததினால் தம்மை விரும்பித் தம் உதவி நாடி வந்த எளியோரை வாழ்வித்தலும் தவத்தோர் கருதுவாராயின் அவர் தவ வலிமையால் அவை கூடும்.
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும். (265)
தவத்தின் பயனாக மறுமையில் தாம் விரும்பிய பேறுகளை யயல்லாம் விரும்பி யவாறே பெறக்கூடிய நிலைமை இருத்தலால் செய்ய வேண்டி தவம் இம்மையில் அறிவுடையோரால் முயன்று செய்யப்படும்.
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. (266)
உலகப் பற்றைத் துறந்து தவஞ் செய்வாரே தம் கருமத்தைச் செய்பவராவர். அவரல்லாதார் பிறவிக்கு ஏதுவான பொருள் இன்ப ஆசை வலையுள் அகப்பட்டுத் தமக்குக் கேடு செய்பவரேயாவர்.
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. (267)
உருக்கப்படும் பொன் தீத் தன்னைச் சுடச்சுடத் தன் மாசு மறு நீங்கி ஒளி மிகுவது போலத் தவஞ் செய்ய வல்லவர்க்கு அதனால் வருந் துன்பம் தம்மை வருத்த வருத்தத் தம் தீவினைத் தன்மையும் நீங்கித் தெள்ளறிவு மிகும்.
தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாந் தொழும். (268)
தன் உயிரைத் தனக்கு முற்றுரிமையாகப் பெற்றவனை அங்ஙனம் பெறாத மற்ற மக்களெல்லாம் கைகூப்பி வணங்குவர்.
கூற்றங் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. (269)
தவத்தால் வரும் ஆற்றலைப் பெற்றவர்க்குக் கூற்றுவனை வெல்வதுங் கூடுவதாம்.
இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர். (270)
இவ்வுலகத்திற் செல்வர் சிலராகவும் வறியர் பலராகவும் இருந்ததற்குக் கரணியம், தவஞ் செய்வார் சிலராகவும் அது செய்யாதவர் பலராகவும் இருத்தலே.
No comments:
Post a Comment