3. நீத்தார் பெருமை
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. (21)
நூல்களது துணிவு, தமக்குரிய ஒழுக்கத்தின்கண் உறைத்து நின்று உலகப்பற்றைத் துறந்த முனிவரது பெருமையைச் சிறந்த பொருள் எல்லாவற்றுள்ளும் சிறந்ததாக விரும்பும்.
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்(து)
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. (22)
இருவகைப் பற்றையும் முற்றும் விட்டுவிட்ட முனிவரது பெருமையை இவ்வளவினது என்று அளவிட்டுக் கூறப்புகின் அது, இவ்வுலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவரை யயல்லாம் இத்தனையர் என எண்ணியறியப் புகுந்தாற் போல்வதாம்.
இருமை வகைதெரிந்து ஈண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு. (23)
பிறப்பு வீடு என்னும் இரண்டின் துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்தறிந்து பிறபபறுத்தற்கு இப்பிறப்பில் துறவறம் பூண்டாரது பெருமையே உலகின்கண் விளங்கித் தோன்றிற்று.
உரனென்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான்
வரயன்னும் வைப்பிற்கோர் வித்து. (24)
அறிவு என்னும் துறட்டியினால், பொறிகளாகிய யானைகள் ஜந்தையும் தன்தன் புலன்மேற் செல்லாது அடக்குபவன், எல்லா நிலங்களும் மேலான வீட்டு நிலத்திற்குப போய் முளைத்தற்குரிய ஒரு விளைந்த மணிவிதை போலாவான்.
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி. (25)
ஐம்புலனையும் அடக்கின முனிவனது வலிமைக்கு அகன்ற வானத்துள்ள தேவர்க்கு அரசனாகிய வேந்தனே (இந்திரனே) போதிய சானனறாளனாம்.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
உயர்திணை எனப்படும் மக்களுள் பிறர் செய்ய முடியாத அருஞ்செயல்களைச் செய்து முடிப்பவர் பெரியோர். பிறர் செய்ய முடியாத அருஞ்செயல்களைச் செய்யாது எளிய செயல்களையே செய்து முடிப்பவர் சிறியோர்.
சுவையயாளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு. (27)
சுவை,ஒளி,ஊறு, ஓசை, நாற்றம் என்னும் பூத மூலங்கள் ஐந்தின் கூறுபாட்டையும் ஆராய்தறியும் ஓகியின் அறிவிற்குள் அடங்கியதே உலகம்.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். (28)
பயன் நிறைந்த சொற்களுடைய துறவியரின் பெருமையை நிலவுலகத்தில் அவர் கட்டளையாகச் சொல்லப்பெறும் மந்திரங்களே கண்கூடாகக் காட்டி விடும்.
குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது. (29)
நற்குணத்தொகுதி என்னும் மலையின் கொடுமுடி ஏறி நின்ற முனிவரின் கடுஞ் சினத்தை, சினக்கப்பட்டரால் நொடி நேர மேனுந் தடுத்தல் முடியாது.
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். (30)
எவ்வகைப்பட்ட உயிர்களிடத்தும் செம்மையான குளிர்ந்த அருளைப் பூண்டு ஒழுகுதலால் அந்தணர் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவர் துறவியரே.
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. (21)
நூல்களது துணிவு, தமக்குரிய ஒழுக்கத்தின்கண் உறைத்து நின்று உலகப்பற்றைத் துறந்த முனிவரது பெருமையைச் சிறந்த பொருள் எல்லாவற்றுள்ளும் சிறந்ததாக விரும்பும்.
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்(து)
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. (22)
இருவகைப் பற்றையும் முற்றும் விட்டுவிட்ட முனிவரது பெருமையை இவ்வளவினது என்று அளவிட்டுக் கூறப்புகின் அது, இவ்வுலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவரை யயல்லாம் இத்தனையர் என எண்ணியறியப் புகுந்தாற் போல்வதாம்.
இருமை வகைதெரிந்து ஈண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு. (23)
பிறப்பு வீடு என்னும் இரண்டின் துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்தறிந்து பிறபபறுத்தற்கு இப்பிறப்பில் துறவறம் பூண்டாரது பெருமையே உலகின்கண் விளங்கித் தோன்றிற்று.
உரனென்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான்
வரயன்னும் வைப்பிற்கோர் வித்து. (24)
அறிவு என்னும் துறட்டியினால், பொறிகளாகிய யானைகள் ஜந்தையும் தன்தன் புலன்மேற் செல்லாது அடக்குபவன், எல்லா நிலங்களும் மேலான வீட்டு நிலத்திற்குப போய் முளைத்தற்குரிய ஒரு விளைந்த மணிவிதை போலாவான்.
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி. (25)
ஐம்புலனையும் அடக்கின முனிவனது வலிமைக்கு அகன்ற வானத்துள்ள தேவர்க்கு அரசனாகிய வேந்தனே (இந்திரனே) போதிய சானனறாளனாம்.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
உயர்திணை எனப்படும் மக்களுள் பிறர் செய்ய முடியாத அருஞ்செயல்களைச் செய்து முடிப்பவர் பெரியோர். பிறர் செய்ய முடியாத அருஞ்செயல்களைச் செய்யாது எளிய செயல்களையே செய்து முடிப்பவர் சிறியோர்.
சுவையயாளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு. (27)
சுவை,ஒளி,ஊறு, ஓசை, நாற்றம் என்னும் பூத மூலங்கள் ஐந்தின் கூறுபாட்டையும் ஆராய்தறியும் ஓகியின் அறிவிற்குள் அடங்கியதே உலகம்.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். (28)
பயன் நிறைந்த சொற்களுடைய துறவியரின் பெருமையை நிலவுலகத்தில் அவர் கட்டளையாகச் சொல்லப்பெறும் மந்திரங்களே கண்கூடாகக் காட்டி விடும்.
குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது. (29)
நற்குணத்தொகுதி என்னும் மலையின் கொடுமுடி ஏறி நின்ற முனிவரின் கடுஞ் சினத்தை, சினக்கப்பட்டரால் நொடி நேர மேனுந் தடுத்தல் முடியாது.
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். (30)
எவ்வகைப்பட்ட உயிர்களிடத்தும் செம்மையான குளிர்ந்த அருளைப் பூண்டு ஒழுகுதலால் அந்தணர் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவர் துறவியரே.
No comments:
Post a Comment