Thursday, December 26, 2019

24. புகழ்

24. புகழ்

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து)
ஊதியம் இல்லை உயிர்க்கு. (231)


வறியார்க்கு வேண்டியவற்றை இயன்றவரை ஈக. அதனாற் புகழுண்டாக வாழ்க. அப்புகழன்றி மக்களுக்கு இவ்வுலகத்திற் பெறக்கூடிய நிலையான பேறு வேறு ஒன்றுமில்லை.

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்(று)
ஈவார்மேல் நிற்கும் புகழ். (232)


உலகத்தில் ஒருவரைப் பற்றிச் சிறப்பாகச் சொல்பவர் சொல்வதெல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு அவர் வேண்டியதொன்றை ஈவார்மேல் நிற்கும் புகழே.

ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில். (233)


தனக்கு இணை இல்லாவாறு உயர்ந்த புகழ் அல்லாமல் இவ்வுலகத்து அழியாது நிற்பது வேறு ஒன்றும் இல்லை.

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு. (234)


ஒருவன் ஈகையால் நிலவுலகத்தின்கண் நிலையான புகழைச் செய்வானாயின் தேவருலகம் அவனையன்றி அறிவால் மட்டுஞ் சிறந்தவரை விரும்பாது.

நத்தம்போற் கேடும் உளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது. (235)


புகழுடம்பின் கரு வளர்ச்சியடைவது போல் (முழு வளர்ச்சியுற்ற) பூதவுடம்பு தளர்ச்சியடைவதும் அப்புகழுடம்பின் பிறப்பாகிய பூதவுடம்பின் இறப்பும் திறப்பாடு உடையவர்க்கன்றி ஆகாவாம்.

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றிலின் தோன்றாமை நன்று. (236)


ஒருவன் இவ்வுலகத்திற்கு பிறக்கின் புகழ்க்கு ஏதுவான குணத்தொடு பிறக்க அக்குணம் இல்லாதார் பிறத்தலைவிடப் பிறவாதிருத்தலே நல்லது.

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன். (237)


தமக்குப் புகழுண்டாக வாழாதவர் அது பற்றிப் பிறர் தம்மை இகழ்ந்த விடத்து அதற்குக் கரணியமான தம்மையே நொந்து கொள்ளாது, தம்மை இகழ்ந்தவரை நோவது எதற்கு?

வசையயன்ப வையத்தார்க் கெல்லாம் இசையயன்னும்
எச்சம் பெறாஅ விடின். (238)


ஒருவன் புகழைத் தனக்குப் பின் நிறுத்தாவிடின் அது உலகத்தில் உள்ள மக்கட்கெல்லாம் பழிப்பாகும் என்று கூறுவர் நல்லோர்.

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம். (239)


புகழைச் செய்யாத உடம்பைச் சுமந்த நிலம் பழிப்பில்லாத வளமுள்ள விளைச்சல் குறையும்.

வசையயாழிய வாழ்வாரே வாழ்வார் இசையயாழிய
வாழ்வாரே வாழா தவர். (240)


தமக்குப் பழிப்பு இல்லாமல் வாழ்பவரே உயிர் வாழ்பவராவர். புகழின்றி வாழ்பவரே உயிரோடு இருந்தும் இறந்தவராவர்.

No comments:

Post a Comment