19. புறங் கூறாமை
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது. (181)
ஒருவன் அறம் என்னுஞ் சொல்லையுஞ் சொல்லாது அறமல்லாதவற்றைச் செய்யினும் ஒருவரையும் பற்றிப் புறங்கூறான் என்று உலகத்தாராற் சொல்லப் படுதல் நன்றாம்.
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை. (182)
ஒருவனைக் காணாவிடத்துப் பழித்துரையால் அழித்துக் கூறிக் கண்ட விடத்து அவனோடு பொய்யாகச் சிரித்து முகமலர்தல், அறம் என்றே ஒன்றும் இல்லை என அழித்துக்கூறி அறமல்லாதவற்றைச் செய்தலினுந் தீயதாம்.
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும். (183)
ஒருவன் பிறனைக் காணாவிடத்துத் தீதாகக் கூறி அவனைக் கண்ட விடத்து நல்லவனாக நடித்து உயிர் வாழ்தலினும் அங்ஙனஞ் செய்யாது இறந்து போதல், அவனுக்கு அறநூல்கள் கூறும் ஆக்கத்தைத் தரும்.
கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல். (184)
ஒருவன் எதிரே நின்று கண்ணோட்டம் இன்றிக் கடுஞ்சொற்களைச் சொல்லினும் அவன் எதிரில் இல்லாவிடத்துப் பின் விளையுந் தீமையை நோக்காத புறங்கூற்றுச் சொற்களைச் சொல்லா தொழிக.
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும். (185)
புறங்கூறுவான் ஒருவன் அறம் நல்லது என்று சொல்லினும் அவன் அதை நெஞ்சாரச் சொல்கின்றானல்லன் என்னும் உண்மை, அவன் புறஞ்சொல் லுதற்குக் கரணியமான சிறுதன்மையால் அறியப்படும்.
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும். (186)
பிறனொருவன் பழியை அவன் புறத்துக் கூறுபவன் தன் சொந்தப் பழி களுள்ளும் கடுமையானவை தெரிந்தெடுக்கப்பட்டு அப்பிறனால் தன் எதிரிலேயே கூறப் படுவான்.
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர். (187)
மகிழுமாறு இனிய சொற்களைச் சொல்லி அயலாரோடும் நட்பாடல் தமக்கு நன்றென்று தெளியாத புறங்கூற்றாளர், பிளவு உண்டாகுமாறு புறங்கூறித் தம் உறவினரையும் தம்மை விட்டுப் பிரியப்பண்ணுவர்.
துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினார்
என்கைகொல் ஏதிலார் மாட்டு. (188)
தம் நெருங்கிய உறவினர் குற்றத்தையும் அவர் புறத்துத் தூற்றும் இயல்பு டைய வன்னெஞ்சர், அயலார் செய்தியில் எத்தகையவராவார்!
அறனோக்கி ஆற்றுங்கொல் வையம் புறனோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை. (189)
பிறர் இல்லாத சமயம் பார்த்து அவரைப் பழித்துரைக்கும் புறங்கூற்றா ளனது உடலைப் பொறுத்தலை, மாநிலம் தனக்கு அறமென்று கருதிச் செய்யும் போலும்!
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பிற்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. (190)
புறங்கூறுவார் தாம் காணும் பிறர் குற்றம் போல் தம் குற்றத்தையும் காணவல்ல ராயின் நிலைபெற்ற மக்களுயிர்க்கு வரக்கூடிய துன்பம் உண்டோ?
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது. (181)
ஒருவன் அறம் என்னுஞ் சொல்லையுஞ் சொல்லாது அறமல்லாதவற்றைச் செய்யினும் ஒருவரையும் பற்றிப் புறங்கூறான் என்று உலகத்தாராற் சொல்லப் படுதல் நன்றாம்.
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை. (182)
ஒருவனைக் காணாவிடத்துப் பழித்துரையால் அழித்துக் கூறிக் கண்ட விடத்து அவனோடு பொய்யாகச் சிரித்து முகமலர்தல், அறம் என்றே ஒன்றும் இல்லை என அழித்துக்கூறி அறமல்லாதவற்றைச் செய்தலினுந் தீயதாம்.
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும். (183)
ஒருவன் பிறனைக் காணாவிடத்துத் தீதாகக் கூறி அவனைக் கண்ட விடத்து நல்லவனாக நடித்து உயிர் வாழ்தலினும் அங்ஙனஞ் செய்யாது இறந்து போதல், அவனுக்கு அறநூல்கள் கூறும் ஆக்கத்தைத் தரும்.
கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல். (184)
ஒருவன் எதிரே நின்று கண்ணோட்டம் இன்றிக் கடுஞ்சொற்களைச் சொல்லினும் அவன் எதிரில் இல்லாவிடத்துப் பின் விளையுந் தீமையை நோக்காத புறங்கூற்றுச் சொற்களைச் சொல்லா தொழிக.
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும். (185)
புறங்கூறுவான் ஒருவன் அறம் நல்லது என்று சொல்லினும் அவன் அதை நெஞ்சாரச் சொல்கின்றானல்லன் என்னும் உண்மை, அவன் புறஞ்சொல் லுதற்குக் கரணியமான சிறுதன்மையால் அறியப்படும்.
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும். (186)
பிறனொருவன் பழியை அவன் புறத்துக் கூறுபவன் தன் சொந்தப் பழி களுள்ளும் கடுமையானவை தெரிந்தெடுக்கப்பட்டு அப்பிறனால் தன் எதிரிலேயே கூறப் படுவான்.
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர். (187)
மகிழுமாறு இனிய சொற்களைச் சொல்லி அயலாரோடும் நட்பாடல் தமக்கு நன்றென்று தெளியாத புறங்கூற்றாளர், பிளவு உண்டாகுமாறு புறங்கூறித் தம் உறவினரையும் தம்மை விட்டுப் பிரியப்பண்ணுவர்.
துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினார்
என்கைகொல் ஏதிலார் மாட்டு. (188)
தம் நெருங்கிய உறவினர் குற்றத்தையும் அவர் புறத்துத் தூற்றும் இயல்பு டைய வன்னெஞ்சர், அயலார் செய்தியில் எத்தகையவராவார்!
அறனோக்கி ஆற்றுங்கொல் வையம் புறனோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை. (189)
பிறர் இல்லாத சமயம் பார்த்து அவரைப் பழித்துரைக்கும் புறங்கூற்றா ளனது உடலைப் பொறுத்தலை, மாநிலம் தனக்கு அறமென்று கருதிச் செய்யும் போலும்!
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பிற்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. (190)
புறங்கூறுவார் தாம் காணும் பிறர் குற்றம் போல் தம் குற்றத்தையும் காணவல்ல ராயின் நிலைபெற்ற மக்களுயிர்க்கு வரக்கூடிய துன்பம் உண்டோ?
No comments:
Post a Comment