23. ஈகை
வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாம்
குறியயதிர்ப்பை நீர துடைத்து. (221)
பொருள் இல்லாதவரும் திருப்பிச் செய்ய இயலாதவருமான ஏழையர்க்கு அவர் வேண்டிய தொன்றைக் கொடுப்பதே ஈகை என்னும் அறச்செய லாம். மற்றக் கைம் மாறு கருதிய கொடுப்பெல்லாம் அளவு குறித்துக் கடன் கொடுக்கும் தன்மையதாம்.
நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று. (222)
பிறரிடத்தினின்று வாங்குவது வீட்டுலகத்திற்கு நல்வழி என்று அறநூல் கூறினும் வாங்குவது தீயது. பிறருக்குக் கொடுப்பதால் அவ்வுலகத்தை அடைய முடியாது என்று அந்நூல் கூறினும், கொடுத்தலே நல்லது.
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள. (223)
யான் ஏழை என்று இரப்போன் சொல்லும் இழிவுரையைத் தான் பிறனிடத்துச் சொல்லாமையும் அவ்விரப்போன் வேண்டியதொன்றை இல்லை என்னாது அவனுக்கு ஈதலும் ஆகிய இரண்டும் உயர்குடிப் பிறந்தான்கண்ணே உள்ளன.
இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு. (224)
ஒரு பொருளை இரந்தவர் அதைப் பெற்றதனால் மலரும் அவரது இனிய முகத்தைக் காணுமளவும், இரத்தலேயன்றி இரக்கப்படுதலும் குடிப்பிறந் தானுக்குத் துன்பந்தருவதாம்.
ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின். (225)
தவத்தால் வலிமை அடைந்தாரது வலிமையயல்லாம் தம்மை வருத்தும் பசியைப் பொறுத்துக் கொள்ளுதலே. அவ்வலிமையும் அப்பொறுத்தற்கு அரிய பசியை ஈகையால் ஒழிப்பவரது வலிமைக்குப் பிற்பட்டதே.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (226)
வறியவரின் கடும்பசியைத் தீர்க்க. அவ்வறச் செயலால் ஒருவன் தான் தேடிய செல்வத்தை மறுமையில் தனக்குப் பயன்படுமாறு சேமித்து வைக்கும் ஏம வைப்பகத்தைப் பெற்றானாவன்.
பாத்தூண் மரீஇ யவனைப் பசியயன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது. (227)
எப்போதும் பலரோடும் பகிர்ந்துண்டு பயின்றவனைப் பசி என்று சொல்லப்படும் கொடிய நோய் தாக்குதல் இல்லை.
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர். (228)
தாம் உடைய பொருளை ஈயாது வைத்திருந்து பின்பு கள்வராலும் கொள்ளைக்கார ராலும் இழக்கும் கன்னெஞ்சர் வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து மகிழும் இன்பத்தை அறியாரோ?
இரத்தலின் இன்னாது மன்ற நிரம்பிய
தாமே தமியர் உணல். (229)
தாம் ஈட்டக் கருதிய பொருட்குறையை நிரப்பவேண்டி, வறியார்க்கொன்று ஈயாது தாமே தமித்துண்டல் திண்ணமாக இரத்தலினும் தீயதாம்.
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை. (230)
ஒருவனுக்கு இறத்தலைப்போலத் துன்பந் தருவது வேறொன்றும் இல்லை. அவ்விறப்பும் வறியார்க்கொன்று ஈதல் இயலாவிடத்து இன்பந்தருவதாம்.
வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாம்
குறியயதிர்ப்பை நீர துடைத்து. (221)
பொருள் இல்லாதவரும் திருப்பிச் செய்ய இயலாதவருமான ஏழையர்க்கு அவர் வேண்டிய தொன்றைக் கொடுப்பதே ஈகை என்னும் அறச்செய லாம். மற்றக் கைம் மாறு கருதிய கொடுப்பெல்லாம் அளவு குறித்துக் கடன் கொடுக்கும் தன்மையதாம்.
நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று. (222)
பிறரிடத்தினின்று வாங்குவது வீட்டுலகத்திற்கு நல்வழி என்று அறநூல் கூறினும் வாங்குவது தீயது. பிறருக்குக் கொடுப்பதால் அவ்வுலகத்தை அடைய முடியாது என்று அந்நூல் கூறினும், கொடுத்தலே நல்லது.
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள. (223)
யான் ஏழை என்று இரப்போன் சொல்லும் இழிவுரையைத் தான் பிறனிடத்துச் சொல்லாமையும் அவ்விரப்போன் வேண்டியதொன்றை இல்லை என்னாது அவனுக்கு ஈதலும் ஆகிய இரண்டும் உயர்குடிப் பிறந்தான்கண்ணே உள்ளன.
இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு. (224)
ஒரு பொருளை இரந்தவர் அதைப் பெற்றதனால் மலரும் அவரது இனிய முகத்தைக் காணுமளவும், இரத்தலேயன்றி இரக்கப்படுதலும் குடிப்பிறந் தானுக்குத் துன்பந்தருவதாம்.
ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின். (225)
தவத்தால் வலிமை அடைந்தாரது வலிமையயல்லாம் தம்மை வருத்தும் பசியைப் பொறுத்துக் கொள்ளுதலே. அவ்வலிமையும் அப்பொறுத்தற்கு அரிய பசியை ஈகையால் ஒழிப்பவரது வலிமைக்குப் பிற்பட்டதே.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (226)
வறியவரின் கடும்பசியைத் தீர்க்க. அவ்வறச் செயலால் ஒருவன் தான் தேடிய செல்வத்தை மறுமையில் தனக்குப் பயன்படுமாறு சேமித்து வைக்கும் ஏம வைப்பகத்தைப் பெற்றானாவன்.
பாத்தூண் மரீஇ யவனைப் பசியயன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது. (227)
எப்போதும் பலரோடும் பகிர்ந்துண்டு பயின்றவனைப் பசி என்று சொல்லப்படும் கொடிய நோய் தாக்குதல் இல்லை.
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர். (228)
தாம் உடைய பொருளை ஈயாது வைத்திருந்து பின்பு கள்வராலும் கொள்ளைக்கார ராலும் இழக்கும் கன்னெஞ்சர் வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து மகிழும் இன்பத்தை அறியாரோ?
இரத்தலின் இன்னாது மன்ற நிரம்பிய
தாமே தமியர் உணல். (229)
தாம் ஈட்டக் கருதிய பொருட்குறையை நிரப்பவேண்டி, வறியார்க்கொன்று ஈயாது தாமே தமித்துண்டல் திண்ணமாக இரத்தலினும் தீயதாம்.
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை. (230)
ஒருவனுக்கு இறத்தலைப்போலத் துன்பந் தருவது வேறொன்றும் இல்லை. அவ்விறப்பும் வறியார்க்கொன்று ஈதல் இயலாவிடத்து இன்பந்தருவதாம்.
No comments:
Post a Comment