28. கூடா வொழுக்கம்
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும். (271)
பிறரை வஞ்சிக்கும் மனத்தை உடையவனின் பொய் யயாழுக்கத்தை, அவன் உடம்பாய்க் கலந்துள்ள ஐம்பூதங்களும் கண்டு தம்முள்ளே எள்ளிச் சிரிக்கும்.
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தானறி குற்றப் படின். (272)
தன் நெஞ்சமே குற்றம் என்று அறிந்ததை ஒருவன் செய்வானாயின் அவனது வானளாவ உயர்ந்த தவக்கோலம் பிறரை அச்சுறுத்துவதன்றி வேறு என்ன பயன்படுவதாம்?
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. (273)
மனத்தை அடக்கும் வலிமை இல்லாத இயல்பினன் வலிமை மிக்க துறவியரின் தவக்கோலத்தைப் பூண்டு கூடாவொழுக்கம் ஒழுகுதல் ஆவு கொல்லைக் காவலர் துரத்தாவண்ணம் புலியின் தோலைப் போர்த்துப் பயிரை மேய்ந்தாற் போலும்.
தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து
வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று. (274)
மனத்தை அடக்கும் வலிமை இல்லாதவன் தவக்கோலத்தின் கண் மறைந்து நின்று கூடாவொழுக்கம் ஒழுகுதல் வேடன் புதரின்கண் மறைந்து நின்று பறவைகளை வலையாற் பிணித்தாற் போலும்.
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்(று)
ஏதம் பலவுந் தரும். (275)
பிறர் தம்மைப் பெரிதும் மதிக்குமாறு யாம் இருவகைப் பற்றும் துறந்தேம் என்று சொல்வாரின் மறைவொழுக்கம், பின்பு தம் தீவினைப் பயனை நுகரும் போது, அந்தோ என் செய்தேன் என் செய்தேன் என்று தனித் தனியே வருந்திப் புலம்புமாறு, அவருக்குப் பல்வகைத் துன்பங்களையும் உண்டாக்கும்.
நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல். (276)
உள்ளத்திற் பற்றறாது பற்று அற்றவர் போல் நடித்துப் பிறரை ஏமாற்றி வாழும் பொய்த் துறவியரைப் போலக் கொடியவர் இவ்வுலகத்தில் இல்லை.
புறங்குன்றிக் கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியார் உடைத்து. (277)
வெளிக் கோலத்தில் குன்றிமணியின் பின்புறம் கண்டாற் போலச் செம்மை உடைய வரேனும் உள்ளத்தில் அதன் மூக்குப் போல இருண்டிருப்பவரை உடையது இவ் வுலகம்.
மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர். (278)
தம் மனத்தின்கண் குற்றம் இருக்கவும் தவத்தால் மாட்சிமைப்பட்டவர் போற் பலகால் குளிர்ந்த நீரில் மூழ்கி அதன் கண்ணே மறைந்தொழுகும் மாந்தர் உலகத்துப் பலர்.
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல். (279)
அம்பு வடிவில் நேராய் இருந்தாலும் செயலிற் கொடியது. யாழ் தண்டால் வளைந்த தேனும் செயலால் இனியது. அங்ஙனமே தவஞ்செய்வாருள்ளும் யார் கொடியர் யார் நேர்மையர் என்பதை அவரவர் கோலத்தாற் கொள்ளாது செயல் வகை யாலேயே அறிந்து கொள்க.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின். (280)
உயர்ந்தோர் தவத்திற்கு ஆகாது என்று தள்ளிய ஒழுக்கத்தை விட்டு விடின் தலை மயிரை வறண்டலும் சடையாக்கலும் வேண்டியதில்லை.
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும். (271)
பிறரை வஞ்சிக்கும் மனத்தை உடையவனின் பொய் யயாழுக்கத்தை, அவன் உடம்பாய்க் கலந்துள்ள ஐம்பூதங்களும் கண்டு தம்முள்ளே எள்ளிச் சிரிக்கும்.
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தானறி குற்றப் படின். (272)
தன் நெஞ்சமே குற்றம் என்று அறிந்ததை ஒருவன் செய்வானாயின் அவனது வானளாவ உயர்ந்த தவக்கோலம் பிறரை அச்சுறுத்துவதன்றி வேறு என்ன பயன்படுவதாம்?
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. (273)
மனத்தை அடக்கும் வலிமை இல்லாத இயல்பினன் வலிமை மிக்க துறவியரின் தவக்கோலத்தைப் பூண்டு கூடாவொழுக்கம் ஒழுகுதல் ஆவு கொல்லைக் காவலர் துரத்தாவண்ணம் புலியின் தோலைப் போர்த்துப் பயிரை மேய்ந்தாற் போலும்.
தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து
வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று. (274)
மனத்தை அடக்கும் வலிமை இல்லாதவன் தவக்கோலத்தின் கண் மறைந்து நின்று கூடாவொழுக்கம் ஒழுகுதல் வேடன் புதரின்கண் மறைந்து நின்று பறவைகளை வலையாற் பிணித்தாற் போலும்.
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்(று)
ஏதம் பலவுந் தரும். (275)
பிறர் தம்மைப் பெரிதும் மதிக்குமாறு யாம் இருவகைப் பற்றும் துறந்தேம் என்று சொல்வாரின் மறைவொழுக்கம், பின்பு தம் தீவினைப் பயனை நுகரும் போது, அந்தோ என் செய்தேன் என் செய்தேன் என்று தனித் தனியே வருந்திப் புலம்புமாறு, அவருக்குப் பல்வகைத் துன்பங்களையும் உண்டாக்கும்.
நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல். (276)
உள்ளத்திற் பற்றறாது பற்று அற்றவர் போல் நடித்துப் பிறரை ஏமாற்றி வாழும் பொய்த் துறவியரைப் போலக் கொடியவர் இவ்வுலகத்தில் இல்லை.
புறங்குன்றிக் கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியார் உடைத்து. (277)
வெளிக் கோலத்தில் குன்றிமணியின் பின்புறம் கண்டாற் போலச் செம்மை உடைய வரேனும் உள்ளத்தில் அதன் மூக்குப் போல இருண்டிருப்பவரை உடையது இவ் வுலகம்.
மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர். (278)
தம் மனத்தின்கண் குற்றம் இருக்கவும் தவத்தால் மாட்சிமைப்பட்டவர் போற் பலகால் குளிர்ந்த நீரில் மூழ்கி அதன் கண்ணே மறைந்தொழுகும் மாந்தர் உலகத்துப் பலர்.
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல். (279)
அம்பு வடிவில் நேராய் இருந்தாலும் செயலிற் கொடியது. யாழ் தண்டால் வளைந்த தேனும் செயலால் இனியது. அங்ஙனமே தவஞ்செய்வாருள்ளும் யார் கொடியர் யார் நேர்மையர் என்பதை அவரவர் கோலத்தாற் கொள்ளாது செயல் வகை யாலேயே அறிந்து கொள்க.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின். (280)
உயர்ந்தோர் தவத்திற்கு ஆகாது என்று தள்ளிய ஒழுக்கத்தை விட்டு விடின் தலை மயிரை வறண்டலும் சடையாக்கலும் வேண்டியதில்லை.
No comments:
Post a Comment