15. பிறனில் விழையாமை
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்(து)
அறம்பொருள் கண்டார்கண் இல். (141)
வேறொருவன் உடமையாக உள்ளவளைக் காதலித்தொழுகும் மடமை நில வுலகத்தில் அறநூலையும், பொருள்நூலையுங் கற்றுத் தெளிந்தவரிடம் இல்லை.
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையார் இல். (142)
காமம் பற்றித் தீவினை செய்தார் எல்லாருள்ளும் பிறன் மனைவியைக் காதலித்து அவன் வீட்டு வாயிற்கண் போய் நின்றாரைப் போலப் பேதையார் இல்லை.
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார். (143)
தம்மை நல்லவர் என்று நம்பித் தாராளமாய்ப் பழகவிட்டவரின் மனைவியின்கண் தீவினை செய்தலை விரும்பி ஒழுகுவார் உறுதியாக இறந்தாரின் வேறுபட்டவரல்லர்.
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல். (144)
எத்துணை உயர்ந்தோராயினும் தாம் செய்யுந் தீவினையைத் தினையளவும் எண்ணிப்பாராது பிறன் மனைவியை விரும்பி அவன் இல்லத்திற்குட் புகுதல் என்ன பயனுடைத்தாம்?
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி. (145)
பின்விளைவு கருதாது இன்பம் ஒன்றையே நோக்கி அதையடைவது எளிதென்று பிறன் மனைவியின் கண் நெறிகடந்து ஒழுகுபவன் தீராது எப்போதும் நிற்கும் தன் பழியையும் தன் குடிப்பழியையும் அடைவான்.
பகைபாவம் அச்சம் பழியயன நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண். (146)
பிறன் மனைவியின் கண் நெறிகடந்து ஒழுகுபவனிடத்துப் பகையும் கரிசும் அச்சமும் பழியும் ஆகிய நாற்கேடுகளும் ஒருகாலும் நீங்காவாம். (கரிசு-பாவம்)
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன். (147)
அற இயல்போடு கூடி இல்வாழ்வான் என்று சொல்லப்படுபவன், பிறனுக்கு உரிமை பூண்டு அவன் வழி நிற்பவளின் பெண்டன்மையை விரும்பாதவனாவான்.
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்(கு)
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு. (148)
அறிவு நிறைந்தோர்க்கு, பிறன் மனைவியைக் கருதாத பெரிய ஆண் டகைமை அறம் மட்டுமோ, நிரம்பிய ஒழுக்கமுமாம்.
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பில்
பிறற்குரியாள் தோதோயா தார். (149)
அஞ்சத்தக்க கடலாற் சூழப்பட்ட நிலவுலகத்தின்கண் எல்லா நலங்களும் பெறுதற்கு உரியார் எவர் எனில் பிறன் ஒருவனுக்கு உரியவளின் தோளைத் தழுவாதார்.
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று. (150)
ஒருவன் அறத்தைத் தனக்கு உரியதாகக் கொள்ளாது தீவினைகளைச் செய்து வருவானாயினும் பிறனாட்சிக்கு உட்பட்டவளின் பெண் தன்மையை விரும்பாமையை அவன் மேற்கொள்ளின் அது அவனுக்கு நல்லதாம்.
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்(து)
அறம்பொருள் கண்டார்கண் இல். (141)
வேறொருவன் உடமையாக உள்ளவளைக் காதலித்தொழுகும் மடமை நில வுலகத்தில் அறநூலையும், பொருள்நூலையுங் கற்றுத் தெளிந்தவரிடம் இல்லை.
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையார் இல். (142)
காமம் பற்றித் தீவினை செய்தார் எல்லாருள்ளும் பிறன் மனைவியைக் காதலித்து அவன் வீட்டு வாயிற்கண் போய் நின்றாரைப் போலப் பேதையார் இல்லை.
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார். (143)
தம்மை நல்லவர் என்று நம்பித் தாராளமாய்ப் பழகவிட்டவரின் மனைவியின்கண் தீவினை செய்தலை விரும்பி ஒழுகுவார் உறுதியாக இறந்தாரின் வேறுபட்டவரல்லர்.
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல். (144)
எத்துணை உயர்ந்தோராயினும் தாம் செய்யுந் தீவினையைத் தினையளவும் எண்ணிப்பாராது பிறன் மனைவியை விரும்பி அவன் இல்லத்திற்குட் புகுதல் என்ன பயனுடைத்தாம்?
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி. (145)
பின்விளைவு கருதாது இன்பம் ஒன்றையே நோக்கி அதையடைவது எளிதென்று பிறன் மனைவியின் கண் நெறிகடந்து ஒழுகுபவன் தீராது எப்போதும் நிற்கும் தன் பழியையும் தன் குடிப்பழியையும் அடைவான்.
பகைபாவம் அச்சம் பழியயன நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண். (146)
பிறன் மனைவியின் கண் நெறிகடந்து ஒழுகுபவனிடத்துப் பகையும் கரிசும் அச்சமும் பழியும் ஆகிய நாற்கேடுகளும் ஒருகாலும் நீங்காவாம். (கரிசு-பாவம்)
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன். (147)
அற இயல்போடு கூடி இல்வாழ்வான் என்று சொல்லப்படுபவன், பிறனுக்கு உரிமை பூண்டு அவன் வழி நிற்பவளின் பெண்டன்மையை விரும்பாதவனாவான்.
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்(கு)
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு. (148)
அறிவு நிறைந்தோர்க்கு, பிறன் மனைவியைக் கருதாத பெரிய ஆண் டகைமை அறம் மட்டுமோ, நிரம்பிய ஒழுக்கமுமாம்.
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பில்
பிறற்குரியாள் தோதோயா தார். (149)
அஞ்சத்தக்க கடலாற் சூழப்பட்ட நிலவுலகத்தின்கண் எல்லா நலங்களும் பெறுதற்கு உரியார் எவர் எனில் பிறன் ஒருவனுக்கு உரியவளின் தோளைத் தழுவாதார்.
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று. (150)
ஒருவன் அறத்தைத் தனக்கு உரியதாகக் கொள்ளாது தீவினைகளைச் செய்து வருவானாயினும் பிறனாட்சிக்கு உட்பட்டவளின் பெண் தன்மையை விரும்பாமையை அவன் மேற்கொள்ளின் அது அவனுக்கு நல்லதாம்.
No comments:
Post a Comment