18.வெஃகாமை
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிங்
குற்றமும் ஆங்கே தரும். (171)
பிறர் பொருளையும் தம்பொருள்போற் கருதும் நடுவுநிலைமை இல்லாது அவரது நற்செல்வத்தின் மேல் ஒருவன் ஆசை வைப்பின் அத்தீய ஆசைவைப்பு அவனுக்கு மறுமைத் துன்பத்திற்கு ஏதுவாகிய தீவினைக் குற்றத்தையும் உண்டாக்கும்.
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர். (172)
நடுவுநிலையன்மைக்கு அஞ்சி நாணுபவர் பிறர் பொருளைக் கவர்வதனால் தமக்கு உண்டாகும் பயனை விரும்பிப் பழிக்கத் தக்க செயல்களைச் செய்யார்.
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர். (173)
பிறர் பொருளைக் கவர்வதால் தாம் அடையும் நிலையில்லாத சிற்றளவான தீய இன்பத்தை விரும்பி அறனல்லாத செயல்களைச் செய்யார், அறத்தால் வருவதும் நிலையானதும் பேரளவினதுமான வேறு நல்லின்பத்தை வேண்டும் அறிவுடை யோர்.
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர். (174)
ஐம்புலன்களையும் அடக்கிய குற்றமற்ற அறிவினையுடையோர் ‘யாம் பொருளி லேம்’ என்று எண்ணி அவ்வின்மையைத் தீர்த்தற்பொருட்டுப் பிறர்பொருளை விரும்புதல் செய்யார்.
அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின். (175)
உணர்வால் நுணுகிப் பொருளாற் பரந்த ஒருவரது கல்வியறிவால் என்ன பயனாம், அவர் பிறர் பொருளை விரும்பி எல்லாரிடத்தும் தம் அறிவொடு பொருந்தாத செயல் களைச் செய்வாராயின்?
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும். (176)
அன்பை மட்டுமன்றி அருளையும் விரும்பி இல்லறத்தின்கண் நின்றவன், பிறர் பொருளை விரும்பி அதைக் கைப்பற்றத் தீய வழிகளை ஆராய்ந்து எண்ணிய மட்டிற் கெட்டு விடுவான்.
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன். (177)
பிறர் பொருளைக் கவர்வதால் உண்டாகும் ஆக்கத்தை விரும்பற்க; பின்பு நுகருங் காலத்தில் அவ்வாக்கத்தின் பயன் நன்றாதல் இல்லையாதலின்.
அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள். (178)
ஒருவனது செல்வம் சுருங்காமல் இருத்தற்கு வழி எதுவெனின் அது பிறனுக்குத் தேவையான அவனது கைப்பொருளைத் தான் விரும்பாமையாம்.
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந் தாங்கே திரு. (179)
இது அறமென்று தெளிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடை யாரிடத்துத் திருமகள் தான் அடைதற்கான திறங்களை அறிந்து அவற்றின்படியே சென்றடை வாள்.
இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு. (180)
பின் விளைவதை எண்ணிப்பாராது ஒருவன் பிறன் பொருளைக் கைப்பற்றக் கருதின் அக்கருத்து அவனுக்கு முடிவைத் தரும்; பிறன் பொருளை விரும்பாமை என்னும் பெருமிதம் வெற்றியைத் தரும்.
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிங்
குற்றமும் ஆங்கே தரும். (171)
பிறர் பொருளையும் தம்பொருள்போற் கருதும் நடுவுநிலைமை இல்லாது அவரது நற்செல்வத்தின் மேல் ஒருவன் ஆசை வைப்பின் அத்தீய ஆசைவைப்பு அவனுக்கு மறுமைத் துன்பத்திற்கு ஏதுவாகிய தீவினைக் குற்றத்தையும் உண்டாக்கும்.
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர். (172)
நடுவுநிலையன்மைக்கு அஞ்சி நாணுபவர் பிறர் பொருளைக் கவர்வதனால் தமக்கு உண்டாகும் பயனை விரும்பிப் பழிக்கத் தக்க செயல்களைச் செய்யார்.
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர். (173)
பிறர் பொருளைக் கவர்வதால் தாம் அடையும் நிலையில்லாத சிற்றளவான தீய இன்பத்தை விரும்பி அறனல்லாத செயல்களைச் செய்யார், அறத்தால் வருவதும் நிலையானதும் பேரளவினதுமான வேறு நல்லின்பத்தை வேண்டும் அறிவுடை யோர்.
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர். (174)
ஐம்புலன்களையும் அடக்கிய குற்றமற்ற அறிவினையுடையோர் ‘யாம் பொருளி லேம்’ என்று எண்ணி அவ்வின்மையைத் தீர்த்தற்பொருட்டுப் பிறர்பொருளை விரும்புதல் செய்யார்.
அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின். (175)
உணர்வால் நுணுகிப் பொருளாற் பரந்த ஒருவரது கல்வியறிவால் என்ன பயனாம், அவர் பிறர் பொருளை விரும்பி எல்லாரிடத்தும் தம் அறிவொடு பொருந்தாத செயல் களைச் செய்வாராயின்?
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும். (176)
அன்பை மட்டுமன்றி அருளையும் விரும்பி இல்லறத்தின்கண் நின்றவன், பிறர் பொருளை விரும்பி அதைக் கைப்பற்றத் தீய வழிகளை ஆராய்ந்து எண்ணிய மட்டிற் கெட்டு விடுவான்.
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன். (177)
பிறர் பொருளைக் கவர்வதால் உண்டாகும் ஆக்கத்தை விரும்பற்க; பின்பு நுகருங் காலத்தில் அவ்வாக்கத்தின் பயன் நன்றாதல் இல்லையாதலின்.
அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள். (178)
ஒருவனது செல்வம் சுருங்காமல் இருத்தற்கு வழி எதுவெனின் அது பிறனுக்குத் தேவையான அவனது கைப்பொருளைத் தான் விரும்பாமையாம்.
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந் தாங்கே திரு. (179)
இது அறமென்று தெளிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடை யாரிடத்துத் திருமகள் தான் அடைதற்கான திறங்களை அறிந்து அவற்றின்படியே சென்றடை வாள்.
இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு. (180)
பின் விளைவதை எண்ணிப்பாராது ஒருவன் பிறன் பொருளைக் கைப்பற்றக் கருதின் அக்கருத்து அவனுக்கு முடிவைத் தரும்; பிறன் பொருளை விரும்பாமை என்னும் பெருமிதம் வெற்றியைத் தரும்.
No comments:
Post a Comment