4. அறன் வலியுறுத்தல்
சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு? (31)
மறுமையில் விண்ணுலக இன்பத்தையும் வீடுபேற்றையும் தரும். இம்மையில் செல்வத்தையும் தரும். ஆதலால் மக்களுயிர்க்கு அறத்தை விடச் சிறந்த ஆக்கம் எதுதான்?
அறத்தினூஉங் ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு. (32)
ஒருவருக்கு அறஞ்செய்வதிலும் சிறந்த ஆக்க வழியும் இல்லை. அதை மறந்து செய்யாது விடுவதிலும் பெரிய கெடுதல் வழியும் இல்லை.
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல். (33)
அறமாகிய நல்வினையைத் தத்தமக்கு இயன்றவாறு அது நடைபெறக் கூடிய வழியயல்லாம் இடைவிடாது செய்க.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. (34)
ஒருவன் தன் மனத்தின்கண் குற்றமற்றவனாய் இருத்தலாகிய அவ்வளவே அறமாவது. மற்றப் பூச்சும் ஆடையும் அணியும் ஆகிய கோலங்கள் எல்லாம் வீண் ஆரவாரத் தன்மையன.
அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம். (35)
பிறராக்கம் பொறாமையும் அவ்வாக்கத்தின்மேற் செல்லும் ஆசையும் அதைப் பெறாவிடத்து எழும் சினமும் அது பற்றிவருங் கடுஞ்சொல்லும் ஆகிய இந்நான்கை யும் விலக்கி நடந்தே அறமாவது.
அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை. (36)
யாம் இன்று இளமையாய் இருப்பதாற் பிந்தி முதுமையிற செய்வேம் என்று கடத்தி வையாது இன்றிருந்தே அறவினையைச செய்து வருக. பின்பு அவ்வறம் இறக்குங் காலத்து இறவாத் துணையாம்.
அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை. (37)
அறத்தின் பயன் இதுவென்று உரை அளவையால் ஒருவர்அறிவிக்க வேண்டிய தில்லை. பல்லக்கைச்சுமப்பானேடு அதில் ஏறிச்செல்வான் இடைப்பட்ட காட்சி அளவையாலேயே அது அறியப்படும்.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல். (38)
செய்யாது வீணாகக் கழியும் நாள் இல்லாதவாறு ஒருவன் நாள்தோறும் அறத்தைச் செய்து வருவானாயின் அச்செயல் அவன் இவ்வுலகில் உடம்போடு கூடி வாழும் நாள் வரும் வழியை அடைக்குங் கல்லாகும்.
அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இல. (39)
அறவழியால் ஒருவர்க்கு வரும் இன்பமே உண்மையான இன்பமாவது. வேறு தீய வழியில் வருவன எல்லாம் இன்பம் போல் தோன்றினும் துன்பத்தின்பாற் படுவனவே. அதோடு அவை புகழுடையனவும் ஆகா.
செயற்பால தோரும் அறனே ஒருவற்(கு)
உயற்பால தோரும் பழி. (40)
ஒருவன் என்றும் செய்யத்தக்கது நல்வினையே. செய்யாது விடத்தக்கது தீவினையே.
சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு? (31)
மறுமையில் விண்ணுலக இன்பத்தையும் வீடுபேற்றையும் தரும். இம்மையில் செல்வத்தையும் தரும். ஆதலால் மக்களுயிர்க்கு அறத்தை விடச் சிறந்த ஆக்கம் எதுதான்?
அறத்தினூஉங் ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு. (32)
ஒருவருக்கு அறஞ்செய்வதிலும் சிறந்த ஆக்க வழியும் இல்லை. அதை மறந்து செய்யாது விடுவதிலும் பெரிய கெடுதல் வழியும் இல்லை.
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல். (33)
அறமாகிய நல்வினையைத் தத்தமக்கு இயன்றவாறு அது நடைபெறக் கூடிய வழியயல்லாம் இடைவிடாது செய்க.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. (34)
ஒருவன் தன் மனத்தின்கண் குற்றமற்றவனாய் இருத்தலாகிய அவ்வளவே அறமாவது. மற்றப் பூச்சும் ஆடையும் அணியும் ஆகிய கோலங்கள் எல்லாம் வீண் ஆரவாரத் தன்மையன.
அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம். (35)
பிறராக்கம் பொறாமையும் அவ்வாக்கத்தின்மேற் செல்லும் ஆசையும் அதைப் பெறாவிடத்து எழும் சினமும் அது பற்றிவருங் கடுஞ்சொல்லும் ஆகிய இந்நான்கை யும் விலக்கி நடந்தே அறமாவது.
அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை. (36)
யாம் இன்று இளமையாய் இருப்பதாற் பிந்தி முதுமையிற செய்வேம் என்று கடத்தி வையாது இன்றிருந்தே அறவினையைச செய்து வருக. பின்பு அவ்வறம் இறக்குங் காலத்து இறவாத் துணையாம்.
அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை. (37)
அறத்தின் பயன் இதுவென்று உரை அளவையால் ஒருவர்அறிவிக்க வேண்டிய தில்லை. பல்லக்கைச்சுமப்பானேடு அதில் ஏறிச்செல்வான் இடைப்பட்ட காட்சி அளவையாலேயே அது அறியப்படும்.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல். (38)
செய்யாது வீணாகக் கழியும் நாள் இல்லாதவாறு ஒருவன் நாள்தோறும் அறத்தைச் செய்து வருவானாயின் அச்செயல் அவன் இவ்வுலகில் உடம்போடு கூடி வாழும் நாள் வரும் வழியை அடைக்குங் கல்லாகும்.
அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இல. (39)
அறவழியால் ஒருவர்க்கு வரும் இன்பமே உண்மையான இன்பமாவது. வேறு தீய வழியில் வருவன எல்லாம் இன்பம் போல் தோன்றினும் துன்பத்தின்பாற் படுவனவே. அதோடு அவை புகழுடையனவும் ஆகா.
செயற்பால தோரும் அறனே ஒருவற்(கு)
உயற்பால தோரும் பழி. (40)
ஒருவன் என்றும் செய்யத்தக்கது நல்வினையே. செய்யாது விடத்தக்கது தீவினையே.
No comments:
Post a Comment