14. ஒழுக்கமுடைமை
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும். (131)
ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பைத் தருதலால், அவ்வொழுக்கம் உயிரினும் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும்.
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை. (132)
ஒழுக்கத்தை எவ்வகையிலும் கெடாதவாறு வருந்தியும் பேணிக்காக்க. பலவகை அறங்களையும் ஆராய்ந்து அவற்றுள் இருமைக்கும் துணை யாவதை எவ்வளவு கவனமாகத் தேர்ந்தாலும், அவ்வொழுக்கமே துணை யாக முடியும். (ஏகாம் பிரிநிலை).
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். (133)
நல்லொழுக்கம் உடைமையே உயர்குலத் தன்மையாம். தீயயாழுக்கம் தாழ்ந்த குலமாகிவிடும்.
மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (134)
ஆரியப் பார்ப்பானான பிராமணன் தான் கற்ற வேதத்தை மறந்தானாயினும் அதைத் திரும்ப ஓதிக்கொள்ள முடியும். ஆனால் அவன் தன்னை உயர்ந்தவனாகச் சொல்லிக் கொள்ளும் பிறப்பு, தமிழ ஒழுக்கங் குன்றின் கெடும்.
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு. (135)
பொறாமை உள்ளவனிடத்திற் செல்வம் இல்லாதது போல, ஒழுக்கம் இல்லாத வனிடத்து உயர்வு இல்லை. (உயர்வு உயர்குலத்தானாதல்)
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து. (136)
ஒழுக்கக் கேட்டால் தமக்குக் குல இழிபாகிய கேடு உண்டாவதை அறிந்து, அறிவுடை யோர் ஒழுக்கத்தில் தளரார்.
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி. (137)
ஒழுக்கத்தினால் எல்லாரும் உயர்வடைவர்; அவ்வொழுக்கத்தினின்று தவறு தலால் தமக்கு உரியதல்லாத பழியையும் அடைவர்.
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயயாழுக்கம்
என்றும் இடும்பை தரும். (138)
ஒருவனுக்கு நல்லொழுக்கம் நன்மைக்குக் கரணியமாய் இருமையிலும் இன்பந் தரும். தீயயாழுக்கம் எக்காலும் துன்பமே தரும்.
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல். (139)
மறந்தும் தீய சொற்களைத் தம் வாயாற் சொல்லும் சொலவுகள் ஒழுக்கமுடைய உயர்ந்தோர்க்கு இயலா.
உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். (140)
உயர்ந்தோரோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார் பல நூல்களைக் கற்ற வரேனும் அறிவிலாதாரே.
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும். (131)
ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பைத் தருதலால், அவ்வொழுக்கம் உயிரினும் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும்.
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை. (132)
ஒழுக்கத்தை எவ்வகையிலும் கெடாதவாறு வருந்தியும் பேணிக்காக்க. பலவகை அறங்களையும் ஆராய்ந்து அவற்றுள் இருமைக்கும் துணை யாவதை எவ்வளவு கவனமாகத் தேர்ந்தாலும், அவ்வொழுக்கமே துணை யாக முடியும். (ஏகாம் பிரிநிலை).
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். (133)
நல்லொழுக்கம் உடைமையே உயர்குலத் தன்மையாம். தீயயாழுக்கம் தாழ்ந்த குலமாகிவிடும்.
மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (134)
ஆரியப் பார்ப்பானான பிராமணன் தான் கற்ற வேதத்தை மறந்தானாயினும் அதைத் திரும்ப ஓதிக்கொள்ள முடியும். ஆனால் அவன் தன்னை உயர்ந்தவனாகச் சொல்லிக் கொள்ளும் பிறப்பு, தமிழ ஒழுக்கங் குன்றின் கெடும்.
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு. (135)
பொறாமை உள்ளவனிடத்திற் செல்வம் இல்லாதது போல, ஒழுக்கம் இல்லாத வனிடத்து உயர்வு இல்லை. (உயர்வு உயர்குலத்தானாதல்)
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து. (136)
ஒழுக்கக் கேட்டால் தமக்குக் குல இழிபாகிய கேடு உண்டாவதை அறிந்து, அறிவுடை யோர் ஒழுக்கத்தில் தளரார்.
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி. (137)
ஒழுக்கத்தினால் எல்லாரும் உயர்வடைவர்; அவ்வொழுக்கத்தினின்று தவறு தலால் தமக்கு உரியதல்லாத பழியையும் அடைவர்.
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயயாழுக்கம்
என்றும் இடும்பை தரும். (138)
ஒருவனுக்கு நல்லொழுக்கம் நன்மைக்குக் கரணியமாய் இருமையிலும் இன்பந் தரும். தீயயாழுக்கம் எக்காலும் துன்பமே தரும்.
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல். (139)
மறந்தும் தீய சொற்களைத் தம் வாயாற் சொல்லும் சொலவுகள் ஒழுக்கமுடைய உயர்ந்தோர்க்கு இயலா.
உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். (140)
உயர்ந்தோரோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார் பல நூல்களைக் கற்ற வரேனும் அறிவிலாதாரே.
No comments:
Post a Comment