34. நிலையாமை
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை. (331)
நிலையில்லாத பொருட்களையும் நிலைமைகளையும் நிலையானவை யயன்று கருதும் பேதமை, கடைப்பட்ட அறியாமையாம்.
கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று. (332)
ஒருவனுக்குப் பெருஞ்செல்லம் சேர்வது, ஆடல் அரங்கிற்குக் காண்போர் கூட்டம் வந்து கூடுவது போன்றதே. அச்செல்வங் கெடுவதும் அவ்வாடல் முடிந்த பின் அக் கூட்டங் கலைவது போன்றதே.
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல். (333)
செல்வம் யாரிடத்தும் நிலைக்காத தன்மையுடையது. ஆதலால், அத்தகைய செல்வத்தை ஒருவன் பெற்றால் நிலையான பயனுள்ள அறங்களை அப்பொழுதே செய்து கொள்க.
நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின். (334)
உயிரானது நாள் என்று அளவிடுவதாகிய ஒரு கால அளவு போல் தன்னைக் காட்டி வாழ்நாளைச் சமவளவான சிறுசிறு பகுதியாக அறுத்துச் செல்லும் வாளின் வாய்ப்பட்டிருப்பதாகத் தெரியும், அதைக் கூர்ந்தறியும் அறிஞர் இருப்பாராயின் அவருக்கு.
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும். (335)
பேசமுடியாவாறு நாவை அடக்கி, விக்கல் எழுவதற்கு முன் இல்லறத்தா ரால் விண்ணிற்கும் துறவறத்தாரால் வீட்டிருக்கும் ஏற்ற அற வினைகள் விரைந்து செய்யப்படல் வேண்டும்.
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு. (336)
ஒருவன் நேற்று இருந்தான், இன்று இல்லை என்று சொல்லும் பெருமையே உடையது இவ்வுலகம்!
ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியும் அல்ல பல. (337)
ஒரு நொடிப் பொழுதேனும் தம் உடம்போடு கூடியிருத்தலை உறுதியாக அறிய இயலாத மாந்தர், கோடிமட்டுமன்று, அதற்கு மேலும் பல எண்ணங் கொள்வர்.
குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு. (338)
உடம்போடு உயிருக்கு உள்ள உறவு, முன் தனியாது உடனிருந்த முட்டைக் கூடு பின் பிரிந்து தனித்துக் கிடக்க, அதனுள்ளிருந்த பறவைக் குஞ்சு (வெளிவந்து இறக்கை முளைத்த பின் ) பறந்து போன தன்மைத்தே.
உறங்குவது போலும் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. (339)
ஒருவனுக்குச் சாவு வருதல் உறக்கம் வருதலை யயாக்கும். அதன்பின் அவன் மீண்டும் பிறத்தல் உறங்கினவன் திரும்ப விழிப்பதை யயாக்கும்.
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. (340)
பல்வேறு நோய்கட்கும் பல்வகைப் புழுக்கட்கும் வாழிடமாகிய உடம்பு களுள் நெடுகலும் ஓண்டுக்குடியிருந்தே வந்த உயிருக்கு நிலையாக வதியத் தக்க ஓர் உறையுள் இதுகாறும் அமையவில்லை போலும்.
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை. (331)
நிலையில்லாத பொருட்களையும் நிலைமைகளையும் நிலையானவை யயன்று கருதும் பேதமை, கடைப்பட்ட அறியாமையாம்.
கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று. (332)
ஒருவனுக்குப் பெருஞ்செல்லம் சேர்வது, ஆடல் அரங்கிற்குக் காண்போர் கூட்டம் வந்து கூடுவது போன்றதே. அச்செல்வங் கெடுவதும் அவ்வாடல் முடிந்த பின் அக் கூட்டங் கலைவது போன்றதே.
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல். (333)
செல்வம் யாரிடத்தும் நிலைக்காத தன்மையுடையது. ஆதலால், அத்தகைய செல்வத்தை ஒருவன் பெற்றால் நிலையான பயனுள்ள அறங்களை அப்பொழுதே செய்து கொள்க.
நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின். (334)
உயிரானது நாள் என்று அளவிடுவதாகிய ஒரு கால அளவு போல் தன்னைக் காட்டி வாழ்நாளைச் சமவளவான சிறுசிறு பகுதியாக அறுத்துச் செல்லும் வாளின் வாய்ப்பட்டிருப்பதாகத் தெரியும், அதைக் கூர்ந்தறியும் அறிஞர் இருப்பாராயின் அவருக்கு.
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும். (335)
பேசமுடியாவாறு நாவை அடக்கி, விக்கல் எழுவதற்கு முன் இல்லறத்தா ரால் விண்ணிற்கும் துறவறத்தாரால் வீட்டிருக்கும் ஏற்ற அற வினைகள் விரைந்து செய்யப்படல் வேண்டும்.
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு. (336)
ஒருவன் நேற்று இருந்தான், இன்று இல்லை என்று சொல்லும் பெருமையே உடையது இவ்வுலகம்!
ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியும் அல்ல பல. (337)
ஒரு நொடிப் பொழுதேனும் தம் உடம்போடு கூடியிருத்தலை உறுதியாக அறிய இயலாத மாந்தர், கோடிமட்டுமன்று, அதற்கு மேலும் பல எண்ணங் கொள்வர்.
குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு. (338)
உடம்போடு உயிருக்கு உள்ள உறவு, முன் தனியாது உடனிருந்த முட்டைக் கூடு பின் பிரிந்து தனித்துக் கிடக்க, அதனுள்ளிருந்த பறவைக் குஞ்சு (வெளிவந்து இறக்கை முளைத்த பின் ) பறந்து போன தன்மைத்தே.
உறங்குவது போலும் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. (339)
ஒருவனுக்குச் சாவு வருதல் உறக்கம் வருதலை யயாக்கும். அதன்பின் அவன் மீண்டும் பிறத்தல் உறங்கினவன் திரும்ப விழிப்பதை யயாக்கும்.
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. (340)
பல்வேறு நோய்கட்கும் பல்வகைப் புழுக்கட்கும் வாழிடமாகிய உடம்பு களுள் நெடுகலும் ஓண்டுக்குடியிருந்தே வந்த உயிருக்கு நிலையாக வதியத் தக்க ஓர் உறையுள் இதுகாறும் அமையவில்லை போலும்.
No comments:
Post a Comment