17. அழுக்காறாமை
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்றன் நெஞ்சத்(து)
அழுக்கா றிலாத இயல்பு. (161)
ஒருவன் தன் நெஞ்சத்திற் பொறாமை இல்லாத தன்மையைத் தன் ஒழுக்க நெறியாகக் கொள்க.
விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின். (162)
யாரிடத்தும் பொறாமையில்லாது ஒழுகுதலை ஒருவன் பெறுமாயின் அவன் பெறுஞ் சிறந்த பேறுகளுள் அதை ஒப்பது வேறு ஒன்றும் இல்லை.
அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான். (163)
இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டிய செல்வமும் அறமும் ஆகிய பேறுகளைத் தனக்கு வேண்டாதவன் என்று சொல்லப்படுகின்றவன், பிறன் செல்வங் கண்ட விடத்து அதற்கு மகிழாது பொறாமைப்படுபவ னாவன்.
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக் கறிந்து. (164)
அறிவுடையோர் பொறாமைகொண்டு அதனால் அறனல்லாதவற்றைச் செய்யார், அத்தீய நெறியால் தமக்கு இருமையிலும் கேடு வருதலை அறிந்து.
அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங் கேடீன் பது. (165)
பகைவர் கேடு செய்யத் தவறினும் பொறாமை தப்பாது கேடு செய்வது ஆதலின், பொறாமை உள்ளவர்க்குக் கேடு செய்ய அது ஒன்றே போதுமானது; வேறு பகை வேண்டியதில்லை.
கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்ற முடுப்பதூஉ
முண்பதூஉ மின்றிக் கெடும். (166)
ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதைப் பொறாமையால் தடுப்பவன் மட்டுமின்றி, அவன் உறவினரும் உண்ணும் பொருளும் உடுக்கும் பொருளும் இன்றிக் கெடுவர்.
அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும். (167)
பிறர் ஆக்கங் கண்டவிடத்துப் பொறாமை கொள்பவனை, செங்கோலத்தினள் ஆகிய திருமகள் தானும் பொறாது தன் அக்கையாகிய மூதேவிக்குக் காட்டிவிட்டு நீங்கும்.
அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும். (168)
பொறாமை என்று சொல்லப்படும் ஒப்பற்ற கரிசன் (பாவி) தன்னை உடையவனை இம்மைக்கண் செல்வங்கெடுத்து, மறுமைக்கண் நரகத்திற் புகுத்தி விடுவான்.
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமுஞ் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும். (169)
பொறாமை மனத்தானது செல்வமும் பொறாமை கொள்ளாத செவ்விய மனத்தானது வறுமை அல்லது துன்பமும் எக்கரணியம் பற்றி நேர்ந்தன என்று ஆராயப்படும்.
அழுக்கற் றகன்றாரு இல்லையஃ தில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். (170)
பொறாமைப்பட்டுப் பெரியவர் ஆயினாரும் இல்லை; அக்குணம் இல்லாதவர் பேராக்கத்தினின்று நீங்கினாரும் இல்லை.
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்றன் நெஞ்சத்(து)
அழுக்கா றிலாத இயல்பு. (161)
ஒருவன் தன் நெஞ்சத்திற் பொறாமை இல்லாத தன்மையைத் தன் ஒழுக்க நெறியாகக் கொள்க.
விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின். (162)
யாரிடத்தும் பொறாமையில்லாது ஒழுகுதலை ஒருவன் பெறுமாயின் அவன் பெறுஞ் சிறந்த பேறுகளுள் அதை ஒப்பது வேறு ஒன்றும் இல்லை.
அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான். (163)
இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டிய செல்வமும் அறமும் ஆகிய பேறுகளைத் தனக்கு வேண்டாதவன் என்று சொல்லப்படுகின்றவன், பிறன் செல்வங் கண்ட விடத்து அதற்கு மகிழாது பொறாமைப்படுபவ னாவன்.
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக் கறிந்து. (164)
அறிவுடையோர் பொறாமைகொண்டு அதனால் அறனல்லாதவற்றைச் செய்யார், அத்தீய நெறியால் தமக்கு இருமையிலும் கேடு வருதலை அறிந்து.
அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங் கேடீன் பது. (165)
பகைவர் கேடு செய்யத் தவறினும் பொறாமை தப்பாது கேடு செய்வது ஆதலின், பொறாமை உள்ளவர்க்குக் கேடு செய்ய அது ஒன்றே போதுமானது; வேறு பகை வேண்டியதில்லை.
கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்ற முடுப்பதூஉ
முண்பதூஉ மின்றிக் கெடும். (166)
ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதைப் பொறாமையால் தடுப்பவன் மட்டுமின்றி, அவன் உறவினரும் உண்ணும் பொருளும் உடுக்கும் பொருளும் இன்றிக் கெடுவர்.
அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும். (167)
பிறர் ஆக்கங் கண்டவிடத்துப் பொறாமை கொள்பவனை, செங்கோலத்தினள் ஆகிய திருமகள் தானும் பொறாது தன் அக்கையாகிய மூதேவிக்குக் காட்டிவிட்டு நீங்கும்.
அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும். (168)
பொறாமை என்று சொல்லப்படும் ஒப்பற்ற கரிசன் (பாவி) தன்னை உடையவனை இம்மைக்கண் செல்வங்கெடுத்து, மறுமைக்கண் நரகத்திற் புகுத்தி விடுவான்.
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமுஞ் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும். (169)
பொறாமை மனத்தானது செல்வமும் பொறாமை கொள்ளாத செவ்விய மனத்தானது வறுமை அல்லது துன்பமும் எக்கரணியம் பற்றி நேர்ந்தன என்று ஆராயப்படும்.
அழுக்கற் றகன்றாரு இல்லையஃ தில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். (170)
பொறாமைப்பட்டுப் பெரியவர் ஆயினாரும் இல்லை; அக்குணம் இல்லாதவர் பேராக்கத்தினின்று நீங்கினாரும் இல்லை.
No comments:
Post a Comment