22. ஒப்புர வறிதல்
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்னாற்றுங் கொல்லோ உலகு. (211)
உலகில் உள்ள உயிர்கள் தம் வாழ்க்கைக்கு இன்றியமையாத நீரை உதவுகின்ற முகிலுக்கு என்ன கைம்மாறு செய்கின்றன! ஒன்றும் இல்லையே! ஆதலால், அம்முகில் போலும் வள்ளல்கள் செய்யும் ஒப்புரவு களும் கைம்மாறு வேண்டுவன அல்ல.
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. (212)
ஒப்புரவாளன் முயற்சி செய்து தொகுத்த செல்வம் முழுதும் தகுதி யுடையார்க்குப் பல்வகையிலும் உதவி செய்தற் பொருட்டேயாம்.
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் அல்ல பிற. (213)
ஒப்புரவு போன்ற நல்ல செயல்களைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் அரிதேயாம்.
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். (214)
ஒப்புரவு செய்வானும் செய்யாதானும் ஆகிய இருவகைச் செல்வருள், செய்பவனே உயிரோடு கூடி வாழ்பவனாவன். மற்றச் செய்யாதவன் செத்தாருள் ஒருவனாகக் கருதப்படுவான்.
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. (215)
உலகிலுள்ள உயிர்களையயல்லாம் விரும்பி ஒப்புரவு செய்யும் பேரறிவுடையான் செல்வம் ஊர்வாழ்நரின் குடிநீர்க்குளம் நிரம்பினாற் போன்றதே.
பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின். (216)
செல்வம் ஒப்புரவு செய்யும் நேர்மையாளனிடம் சேருமாயின் அது பயன்படும் மரம் ஊர் நடுவே பழுத்தாற் போலும்.
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கட் படின். (217)
செல்வம் ஒப்புரவு செய்யும் பெருந்தகையாளனிடம் சேரின் அது வேர்முதல் கொழுந்துவரை எல்லா உறுப்பும் பல்வேறு நோய்க்கு மருந்தாகித் தப்பாது பயன்படும் மரத்தையயாக்கும்.
இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர். (218)
கடப்பாட்டை அறிந்த அறிவுடையோர் தம் செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புரவு செய்தற்குத் தளரார்.
நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயுநீர
செய்யா தமைகலா வாறு. (219)
ஒப்புரவாளன் வறியவன் ஆதலாவது தவிராது செய்யுந் தன்மையான வேளாண்மைச் செயல்களைச் செய்யவியலாது அமைதியற்றிருக்கும் நிலை மையே.
ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து. (220)
ஒப்புரவினால் ஒருவனுக்குப் பொருட்கேடு வருமாயின், அக்கேடு ஒருவன் தன்னை விற்றாகிலுங் கொள்ளத்தக்க தகுதியை உடையதாம்.
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்னாற்றுங் கொல்லோ உலகு. (211)
உலகில் உள்ள உயிர்கள் தம் வாழ்க்கைக்கு இன்றியமையாத நீரை உதவுகின்ற முகிலுக்கு என்ன கைம்மாறு செய்கின்றன! ஒன்றும் இல்லையே! ஆதலால், அம்முகில் போலும் வள்ளல்கள் செய்யும் ஒப்புரவு களும் கைம்மாறு வேண்டுவன அல்ல.
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. (212)
ஒப்புரவாளன் முயற்சி செய்து தொகுத்த செல்வம் முழுதும் தகுதி யுடையார்க்குப் பல்வகையிலும் உதவி செய்தற் பொருட்டேயாம்.
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் அல்ல பிற. (213)
ஒப்புரவு போன்ற நல்ல செயல்களைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் அரிதேயாம்.
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். (214)
ஒப்புரவு செய்வானும் செய்யாதானும் ஆகிய இருவகைச் செல்வருள், செய்பவனே உயிரோடு கூடி வாழ்பவனாவன். மற்றச் செய்யாதவன் செத்தாருள் ஒருவனாகக் கருதப்படுவான்.
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. (215)
உலகிலுள்ள உயிர்களையயல்லாம் விரும்பி ஒப்புரவு செய்யும் பேரறிவுடையான் செல்வம் ஊர்வாழ்நரின் குடிநீர்க்குளம் நிரம்பினாற் போன்றதே.
பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின். (216)
செல்வம் ஒப்புரவு செய்யும் நேர்மையாளனிடம் சேருமாயின் அது பயன்படும் மரம் ஊர் நடுவே பழுத்தாற் போலும்.
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கட் படின். (217)
செல்வம் ஒப்புரவு செய்யும் பெருந்தகையாளனிடம் சேரின் அது வேர்முதல் கொழுந்துவரை எல்லா உறுப்பும் பல்வேறு நோய்க்கு மருந்தாகித் தப்பாது பயன்படும் மரத்தையயாக்கும்.
இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர். (218)
கடப்பாட்டை அறிந்த அறிவுடையோர் தம் செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புரவு செய்தற்குத் தளரார்.
நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயுநீர
செய்யா தமைகலா வாறு. (219)
ஒப்புரவாளன் வறியவன் ஆதலாவது தவிராது செய்யுந் தன்மையான வேளாண்மைச் செயல்களைச் செய்யவியலாது அமைதியற்றிருக்கும் நிலை மையே.
ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து. (220)
ஒப்புரவினால் ஒருவனுக்குப் பொருட்கேடு வருமாயின், அக்கேடு ஒருவன் தன்னை விற்றாகிலுங் கொள்ளத்தக்க தகுதியை உடையதாம்.
No comments:
Post a Comment