9. விருந்தோம்பல்
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு. (81)
கணவனும் மனைவியும் தம் இல்லத்தின்கண் இருந்து தம்மையும் தம் மக்களையும் தம் பொருள்களையும் பேணிக்காத்து வாழ்வதெல்லாம் விருந் தினரைப் பேணி அவருக்குப் பலவகையிலும் நன்றி (உபகாரம்) செய்தற் பொருட்டே.
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. (82)
உண்ணப்படும் உணவு சாவை நீக்கும் மருந்தே எனினும், விருந்தினரை வீட்டிற்கு வெளியே வைத்துவிட்டுத் தான் மட்டும் உள்ளிருந்து தனித்து உண்டல் விரும்பத் தக்கதன்று.
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று. (83)
நாள்தோறும் தன்னை நோக்கி வருகின்ற விருந்தினரைப் பேணுவானது இல் வாழ்க்கை வறுமையால் துன்புற்றுக் கெடுதல இல்லை.
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல். (84)
முகமலர்ந்து நல்ல விருந்தினரைப் பேணுவானது இல்லத்தின் கண் திருமகள் மனமகிழ்ந்து வதிவாள்.
வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சின் மிசைவான் புலம். (85)
முன்பு விருந்தினரை உண்பித்துவிட்டுப் பின்பு மீந்ததைத் தான் உண்ணும் வேளாளனது நிலத்திற்கு விதை தெளித்தலும் வேண்டுமோ? வேண்டியதில்லை.
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு. (86)
தன்னிடம் முந்தி வந்த விருந்தினரைப் பேணிவிட்டுப் பின்பு பிந்தி வரும் விருந்தின ரையும் எதிர்பார்த்து அவரோடு தான் உண்ணக் காத்திருப் பான், மறுமையில் தேவனாகி விண்ணகத்தாரால் சிறந்த விருந்தினனாக ஏற்றுக் கொள்ளப் படுவான்.
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன். (87)
விருந்தினர்க்கு உணவு படைத்தலின் பயன் இவ்வளவினது என்று வரையறுத்துச் சொல்லுந் திறத்த தன்று. விருந்தினரின் தகுதியளவே அதன் அளவாம்.
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார். (88)
விருந்தினரைப் பேணி அவர்க்குச் சிறந்த உணவு படைத்தலை மேற் கொள் ளாதார், அவ்வறங்கட்குச் செலவிட வேண்டிய பொருளை நிலை யானது என்று மயங்கி வருந்திப் பாதுகாத்தும் பின்பு இழந்துவிட்டதனால் இன்று எமக்கு யாதொரு பற்றுக் கோடும் இல்லை என்று நொந்து கூறா நிற்பர்.
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு. (89)
செல்வக் காலத்து வறுமையாவது விருந்தோம்பலைப் புறக்கணிக்கும் பேதைமை. அது பேதையரிடத்திலேயே உள்ளது.
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. (90)
இயல்பாக மென்மையவுள்ள பூக்களுள்ளும் மிக மென்மையானதாகச் சொல்லப் படும் அனிச்சப் பூவும் மோந்தால் மட்டும் வாடும். ஆனால் தன்மானம் உள்ள விருந் தினரோ, வீட்டாரின் முகம் வேறுபட்டு நோக்கிய மட்டில் வாடிவிடுவர்.
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு. (81)
கணவனும் மனைவியும் தம் இல்லத்தின்கண் இருந்து தம்மையும் தம் மக்களையும் தம் பொருள்களையும் பேணிக்காத்து வாழ்வதெல்லாம் விருந் தினரைப் பேணி அவருக்குப் பலவகையிலும் நன்றி (உபகாரம்) செய்தற் பொருட்டே.
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. (82)
உண்ணப்படும் உணவு சாவை நீக்கும் மருந்தே எனினும், விருந்தினரை வீட்டிற்கு வெளியே வைத்துவிட்டுத் தான் மட்டும் உள்ளிருந்து தனித்து உண்டல் விரும்பத் தக்கதன்று.
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று. (83)
நாள்தோறும் தன்னை நோக்கி வருகின்ற விருந்தினரைப் பேணுவானது இல் வாழ்க்கை வறுமையால் துன்புற்றுக் கெடுதல இல்லை.
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல். (84)
முகமலர்ந்து நல்ல விருந்தினரைப் பேணுவானது இல்லத்தின் கண் திருமகள் மனமகிழ்ந்து வதிவாள்.
வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சின் மிசைவான் புலம். (85)
முன்பு விருந்தினரை உண்பித்துவிட்டுப் பின்பு மீந்ததைத் தான் உண்ணும் வேளாளனது நிலத்திற்கு விதை தெளித்தலும் வேண்டுமோ? வேண்டியதில்லை.
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு. (86)
தன்னிடம் முந்தி வந்த விருந்தினரைப் பேணிவிட்டுப் பின்பு பிந்தி வரும் விருந்தின ரையும் எதிர்பார்த்து அவரோடு தான் உண்ணக் காத்திருப் பான், மறுமையில் தேவனாகி விண்ணகத்தாரால் சிறந்த விருந்தினனாக ஏற்றுக் கொள்ளப் படுவான்.
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன். (87)
விருந்தினர்க்கு உணவு படைத்தலின் பயன் இவ்வளவினது என்று வரையறுத்துச் சொல்லுந் திறத்த தன்று. விருந்தினரின் தகுதியளவே அதன் அளவாம்.
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார். (88)
விருந்தினரைப் பேணி அவர்க்குச் சிறந்த உணவு படைத்தலை மேற் கொள் ளாதார், அவ்வறங்கட்குச் செலவிட வேண்டிய பொருளை நிலை யானது என்று மயங்கி வருந்திப் பாதுகாத்தும் பின்பு இழந்துவிட்டதனால் இன்று எமக்கு யாதொரு பற்றுக் கோடும் இல்லை என்று நொந்து கூறா நிற்பர்.
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு. (89)
செல்வக் காலத்து வறுமையாவது விருந்தோம்பலைப் புறக்கணிக்கும் பேதைமை. அது பேதையரிடத்திலேயே உள்ளது.
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. (90)
இயல்பாக மென்மையவுள்ள பூக்களுள்ளும் மிக மென்மையானதாகச் சொல்லப் படும் அனிச்சப் பூவும் மோந்தால் மட்டும் வாடும். ஆனால் தன்மானம் உள்ள விருந் தினரோ, வீட்டாரின் முகம் வேறுபட்டு நோக்கிய மட்டில் வாடிவிடுவர்.
No comments:
Post a Comment