5. இல்வாழ்க்கை
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. (41)
இல்லறத்தில் வாழ்பவன் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் வேளாளன், இல்லறத்தில் வாழும் இயல்புடைய ஏனை மூவர்க்கும் அவர் செல்லும் நல்லற நெறிக்கண் நிலை பெற்ற துணையாம்.
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை. (42)
உலகப் பற்றைத் துறந்தவர்க்கும், உண்பதற்கு இல்லா வறியர்க்கும், ஒருவரும் இன்றித் தன்னிடம் வந்து இறந்தார்க்கும் இல்லறத்தான் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவன் துணையாம்.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான்னென்றாங்(கு)
ஐம்புலத்தா றோம்பல் தலை. (43)
இறந்த முன்னோர், வழிபடு தெய்வம், விருந்தினர், ஏழையுறவினர், தன் குடும்பம் என்று சொல்லப்படும் அவ்வைந்திடத்தும் செய்ய வேண்டிய அறவினைகளைப் பேணிச் செய்தல் இல்லறத்தானுக்குத் தலையாய கடமையாகும்.
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியயஞ்சல் எஞ்ஞான்றும் இல். (44)
ஒருவனது இல்லற வாழ்க்கை ஈயாத கஞ்சன் என்று பிறர் பழித்தற்கு அஞ்சித் துறந்தார் முதலிய மூவர்க்கும் தென்புலத்தார் முதலிய ஐவர்க்கும் அவன் பொருளைப் பகுத்தளித்து உண்டலை இயல்பாகக் கொண்டிருப்பின், அவனது மரபு வழி ஒருபோதும் அறாது எக்காலும் தொடர்ந்து வருவதாம்.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைப்
பண்பும் பயனும் அது. (45)
ஒருவனது இல்லற வாழ்க்கை அவனுக்கும் அவன் வாழ்க்கைத் துணைக்கும் இடைப்பட்ட இருதலைக் காதலையும் அவர் கருத்தொருமித்துப் பிறர்க்குச் செய்யும் அறவினைகளையும் உடைத்தாயின், அவ்வுடைமை அவ்வாழ்க்கைக்கு முறையே தன்மையும் பயன்விளைவும் ஆகும்.
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவ தெவன்? (46)
ஒருவன் இல்லற வாழ்க்கையை அதற்குரிய அறநெறிப்படி நடத்துவானாயின், அதற்குப் புறம்பாகிய துறவு நெறியற் போய்ப பல்வகையில் துன்புறுவதல்லது சிறப்பாகப பெறும் பயன் யாது?
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாந் தலை. (47)
முறைப்படி இல்லற வாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுகின்றவன், பற்றறுக்க முயலும் துறவு நெறியார் எல்லாருள்ளும் தலைமையனவனாம்.
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து. (48)
தவஞ் செய்பவரைத் தவநெறியில் ஒழுகச் செய்து, தானும் தன அறத்தினின்று தவறாத, இல்வாழ்க்கை அத் தவஞ் செய்வார் நிலையினும் மிகுந்த பொறைத் திறனை உடையது.
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. (49)
இருவகை அறத்துள்ளும் அறம் என்று தமிழ் நூற்களாற் சிறப்பித்துச் சொல்லப் பெற்றது இல்லறமே. அவ்வில்லறமும் பிறராற் பழிக்கப்படாத தூய்மை உடைத்தாயின் மிக நன்றாம்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். (50)
இவ்வுலகத்தில் இல்லறத்து வாழும் முறைப்படி வாழ்கின்றவன் இவ்வுலகத்தானே யாயினும் வானுலகிலுள்ள தேவருள் ஒருவனாக வைத்து மதிக்கப்படுவான்.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. (41)
இல்லறத்தில் வாழ்பவன் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் வேளாளன், இல்லறத்தில் வாழும் இயல்புடைய ஏனை மூவர்க்கும் அவர் செல்லும் நல்லற நெறிக்கண் நிலை பெற்ற துணையாம்.
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை. (42)
உலகப் பற்றைத் துறந்தவர்க்கும், உண்பதற்கு இல்லா வறியர்க்கும், ஒருவரும் இன்றித் தன்னிடம் வந்து இறந்தார்க்கும் இல்லறத்தான் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவன் துணையாம்.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான்னென்றாங்(கு)
ஐம்புலத்தா றோம்பல் தலை. (43)
இறந்த முன்னோர், வழிபடு தெய்வம், விருந்தினர், ஏழையுறவினர், தன் குடும்பம் என்று சொல்லப்படும் அவ்வைந்திடத்தும் செய்ய வேண்டிய அறவினைகளைப் பேணிச் செய்தல் இல்லறத்தானுக்குத் தலையாய கடமையாகும்.
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியயஞ்சல் எஞ்ஞான்றும் இல். (44)
ஒருவனது இல்லற வாழ்க்கை ஈயாத கஞ்சன் என்று பிறர் பழித்தற்கு அஞ்சித் துறந்தார் முதலிய மூவர்க்கும் தென்புலத்தார் முதலிய ஐவர்க்கும் அவன் பொருளைப் பகுத்தளித்து உண்டலை இயல்பாகக் கொண்டிருப்பின், அவனது மரபு வழி ஒருபோதும் அறாது எக்காலும் தொடர்ந்து வருவதாம்.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைப்
பண்பும் பயனும் அது. (45)
ஒருவனது இல்லற வாழ்க்கை அவனுக்கும் அவன் வாழ்க்கைத் துணைக்கும் இடைப்பட்ட இருதலைக் காதலையும் அவர் கருத்தொருமித்துப் பிறர்க்குச் செய்யும் அறவினைகளையும் உடைத்தாயின், அவ்வுடைமை அவ்வாழ்க்கைக்கு முறையே தன்மையும் பயன்விளைவும் ஆகும்.
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவ தெவன்? (46)
ஒருவன் இல்லற வாழ்க்கையை அதற்குரிய அறநெறிப்படி நடத்துவானாயின், அதற்குப் புறம்பாகிய துறவு நெறியற் போய்ப பல்வகையில் துன்புறுவதல்லது சிறப்பாகப பெறும் பயன் யாது?
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாந் தலை. (47)
முறைப்படி இல்லற வாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுகின்றவன், பற்றறுக்க முயலும் துறவு நெறியார் எல்லாருள்ளும் தலைமையனவனாம்.
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து. (48)
தவஞ் செய்பவரைத் தவநெறியில் ஒழுகச் செய்து, தானும் தன அறத்தினின்று தவறாத, இல்வாழ்க்கை அத் தவஞ் செய்வார் நிலையினும் மிகுந்த பொறைத் திறனை உடையது.
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. (49)
இருவகை அறத்துள்ளும் அறம் என்று தமிழ் நூற்களாற் சிறப்பித்துச் சொல்லப் பெற்றது இல்லறமே. அவ்வில்லறமும் பிறராற் பழிக்கப்படாத தூய்மை உடைத்தாயின் மிக நன்றாம்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். (50)
இவ்வுலகத்தில் இல்லறத்து வாழும் முறைப்படி வாழ்கின்றவன் இவ்வுலகத்தானே யாயினும் வானுலகிலுள்ள தேவருள் ஒருவனாக வைத்து மதிக்கப்படுவான்.
No comments:
Post a Comment