30. வாய்மை
வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல். (291)
மெய்ம்மை என்று சொல்லப்படுவது யாது என்று வினவின் அது எவ்வகை உயிர்க்கும் எவ்வகைத் தீங்கும் எட்டுணையும் விளைக்காத சொற்களைச் சொல் லுதலாம்.
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். (292)
குற்றமற்ற நன்மையைப் பிறர்க்கு விளைக்குமாயின் பொய்யான சொற்களும் மெய்யான சொற்களின்பாற் பட்டனவாம்.
தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும். (293)
ஒருவன் தன் நெஞ்சு அறிந்ததொன்றைப் பிறர் அறியவில்லை என்று கருதிப் பொய் சொல்லாதொழிக. பொய் சொன்னானாயின், அதனை அறிந்த தன் நெஞ்சே தான் செய்த தீவினைக்குச் சான்றாக நின்று தன்னைக் குற்றஞ் சாட்டித் துன்புறுத்தும்.
உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன். (294)
ஒருவன் நெஞ்சாரப் பொய் சொல்லாது ஒழுகுவனாயின் அவன் உயர்ந்தோர் உள்ளத்தில் எல்லாம் உளனாவன்.
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை. (295)
ஒருவன் தன் உள்ளத்தோடு பொருந்த உண்மையைச் சொல்வானாயின், அவன் தவமுந் தானமும் ஒருங்கே செய்தவரினுஞ் சிறந்தவனாவன்.
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமும் தரும். (296)
இம்மையில் ஒருவனுக்குப் பொய் சொல்லாமை போன்ற புகழ்க் கரணகம் (காரணம்) வேறில்லை. உடம் வருந்தி எதுவுஞ் செய்யாமலே அது அவனுக்கு மறுமைக்கு வேண்டிய எல்லா அறங்களையுந் தரும்.
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. (297)
ஒருவன் வாய்மை அறத்தைத் தொடர்ந்து செய்ய வல்லவனாயின் அவன் பிற அறங்களைச் செய்யாதிருத்தலே நன்றாம்.
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும். (298)
ஒருவனது உடம்புத் தூய்மை நீரால் உண்டாகும்; உள்ளத் தூய்மை வாய்மையால் அறியப்படும்.
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு. (299)
ஆன்றவிந்தடங்கிய துறவோர்க்குப் புறவிருள் போக்கும் விளக்குகள் எல்லாம் விளக்காகா; அகவிருள் போக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்காம்.
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற. (300)
யாம் உண்மையான அறங்களாகக் கண்டவற்றுள் எவ்வகையிலும் மெய்ம்மை போலச் சிறந்த வேறு அறங்கள் இல்லை.
வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல். (291)
மெய்ம்மை என்று சொல்லப்படுவது யாது என்று வினவின் அது எவ்வகை உயிர்க்கும் எவ்வகைத் தீங்கும் எட்டுணையும் விளைக்காத சொற்களைச் சொல் லுதலாம்.
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். (292)
குற்றமற்ற நன்மையைப் பிறர்க்கு விளைக்குமாயின் பொய்யான சொற்களும் மெய்யான சொற்களின்பாற் பட்டனவாம்.
தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும். (293)
ஒருவன் தன் நெஞ்சு அறிந்ததொன்றைப் பிறர் அறியவில்லை என்று கருதிப் பொய் சொல்லாதொழிக. பொய் சொன்னானாயின், அதனை அறிந்த தன் நெஞ்சே தான் செய்த தீவினைக்குச் சான்றாக நின்று தன்னைக் குற்றஞ் சாட்டித் துன்புறுத்தும்.
உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன். (294)
ஒருவன் நெஞ்சாரப் பொய் சொல்லாது ஒழுகுவனாயின் அவன் உயர்ந்தோர் உள்ளத்தில் எல்லாம் உளனாவன்.
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை. (295)
ஒருவன் தன் உள்ளத்தோடு பொருந்த உண்மையைச் சொல்வானாயின், அவன் தவமுந் தானமும் ஒருங்கே செய்தவரினுஞ் சிறந்தவனாவன்.
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமும் தரும். (296)
இம்மையில் ஒருவனுக்குப் பொய் சொல்லாமை போன்ற புகழ்க் கரணகம் (காரணம்) வேறில்லை. உடம் வருந்தி எதுவுஞ் செய்யாமலே அது அவனுக்கு மறுமைக்கு வேண்டிய எல்லா அறங்களையுந் தரும்.
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. (297)
ஒருவன் வாய்மை அறத்தைத் தொடர்ந்து செய்ய வல்லவனாயின் அவன் பிற அறங்களைச் செய்யாதிருத்தலே நன்றாம்.
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும். (298)
ஒருவனது உடம்புத் தூய்மை நீரால் உண்டாகும்; உள்ளத் தூய்மை வாய்மையால் அறியப்படும்.
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு. (299)
ஆன்றவிந்தடங்கிய துறவோர்க்குப் புறவிருள் போக்கும் விளக்குகள் எல்லாம் விளக்காகா; அகவிருள் போக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்காம்.
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற. (300)
யாம் உண்மையான அறங்களாகக் கண்டவற்றுள் எவ்வகையிலும் மெய்ம்மை போலச் சிறந்த வேறு அறங்கள் இல்லை.
No comments:
Post a Comment