26. புலான் மறுத்தல்
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். (251)
தன் உடம்பைப் பெரிதாக்குவதற்காகத் தான் வேறோர் உயிரியின் உடம்பைக் கொன்று தின்பவன் எங்ஙனந்தான் அருளைக் கையாள்பவன் ஆவன்.
பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. (252)
பொருளைக் கையாளுதல் அதைப் பாதுகாவாதார்க்கு இல்லை. அதுபோல அருளைக் கையாளுதல் ஊன் உண்பவர்க்கு இல்லை.
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன்
உடல்சுவை உண்டார் மனம். (253)
பகைவரைக் கொல்வதற்குக் கொலைக்கருவியைக் கையிற் கொண்டவரின் மனம் அதனாற் செய்யுங் கொலையை யன்றி அருளை நோக்காதது போல ஓர் உயிரியின் உடலைச் சுவையாக உண்டவர் மனம் அவ்வூனையன்றி அருளை நோக்காது.
அருளல்ல தியாதெனின் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல். (254)
அருள் என்பது என்னது எனின் கொல்லாமை. அருள் அல்லாதது எது எனின் கொல்லுதல். ஆதலால், அக்கொல்லுதலால் வந்த ஊனைத் தின்பது கரிசு (பாவம்).
உண்ணாமை உள்ள துயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு. (255)
ஒருசார் உயிர்கள் உடம்பொடு கூடி நிற்றல் ஊன் உண்ணாமை ஆகிய அறத்தால் நேர்வது. ஆதலால், ஒருவன் ஊன் உண்பானாயின், அவனை விழுங்கிய நரகம் பின்பு அவனை வெளிப்படுத்தற்கு வாய் திறவாது.
தினற்பொருட்டால் கொள்ளா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். (256)
பேதைமை அல்லது குறும்புத்தனம் பற்றியல்லது ஊன் தின்பதற்காக உலகத்தார் உயிரிகளைக் கொல்லார் எனின் பொருள் பெறும் நோக்கத்தோடு ஊன் விற்பவரும் ஒருவரும் இரார்.
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின். (257)
புலால் என்பது வேறோர் புண்ணே. அவ்வுண்மையை அறியப்பெறின் அதை உண்ணாதிருத்தல் வேண்டும்.
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன். (258)
மயக்கம் என்னும் குற்றத்தினின்று நீங்கிய தெள்ளறிவினர் ஓர் உயிரினின்று நீங்கிய உடம்பை உண்ணார்.
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. (259)
தீயின்கண் நெய் முதலிய உணவுகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அதன் உடம்பைத் தின்னாமை நன்றாம்.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும். (260)
ஓர் உயிரையுங் கொல்லாதவனாய்ப் புலாலையும் உண்ணாதவனை எல்லா மக்களும் கைகுவித்து வணங்குவர்.
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். (251)
தன் உடம்பைப் பெரிதாக்குவதற்காகத் தான் வேறோர் உயிரியின் உடம்பைக் கொன்று தின்பவன் எங்ஙனந்தான் அருளைக் கையாள்பவன் ஆவன்.
பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. (252)
பொருளைக் கையாளுதல் அதைப் பாதுகாவாதார்க்கு இல்லை. அதுபோல அருளைக் கையாளுதல் ஊன் உண்பவர்க்கு இல்லை.
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன்
உடல்சுவை உண்டார் மனம். (253)
பகைவரைக் கொல்வதற்குக் கொலைக்கருவியைக் கையிற் கொண்டவரின் மனம் அதனாற் செய்யுங் கொலையை யன்றி அருளை நோக்காதது போல ஓர் உயிரியின் உடலைச் சுவையாக உண்டவர் மனம் அவ்வூனையன்றி அருளை நோக்காது.
அருளல்ல தியாதெனின் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல். (254)
அருள் என்பது என்னது எனின் கொல்லாமை. அருள் அல்லாதது எது எனின் கொல்லுதல். ஆதலால், அக்கொல்லுதலால் வந்த ஊனைத் தின்பது கரிசு (பாவம்).
உண்ணாமை உள்ள துயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு. (255)
ஒருசார் உயிர்கள் உடம்பொடு கூடி நிற்றல் ஊன் உண்ணாமை ஆகிய அறத்தால் நேர்வது. ஆதலால், ஒருவன் ஊன் உண்பானாயின், அவனை விழுங்கிய நரகம் பின்பு அவனை வெளிப்படுத்தற்கு வாய் திறவாது.
தினற்பொருட்டால் கொள்ளா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். (256)
பேதைமை அல்லது குறும்புத்தனம் பற்றியல்லது ஊன் தின்பதற்காக உலகத்தார் உயிரிகளைக் கொல்லார் எனின் பொருள் பெறும் நோக்கத்தோடு ஊன் விற்பவரும் ஒருவரும் இரார்.
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின். (257)
புலால் என்பது வேறோர் புண்ணே. அவ்வுண்மையை அறியப்பெறின் அதை உண்ணாதிருத்தல் வேண்டும்.
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன். (258)
மயக்கம் என்னும் குற்றத்தினின்று நீங்கிய தெள்ளறிவினர் ஓர் உயிரினின்று நீங்கிய உடம்பை உண்ணார்.
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. (259)
தீயின்கண் நெய் முதலிய உணவுகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அதன் உடம்பைத் தின்னாமை நன்றாம்.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும். (260)
ஓர் உயிரையுங் கொல்லாதவனாய்ப் புலாலையும் உண்ணாதவனை எல்லா மக்களும் கைகுவித்து வணங்குவர்.
No comments:
Post a Comment