21. தீவினை யச்சம்
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னுஞ் செருக்கு. (201)
தீவினை என்று சொல்லப்படும் இறுமாப்பிற்குத், தீவினை செய்து பழகிய தீயோர் அஞ்சார்; ஆயின் அதைச் செய்தறியாத சீரியோர் அஞ்சுவர்.
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும். (202)
ஒருவன் தனக்கு இன்பங் கருதிச் செய்யும் தீவினைகள் இம்மையிலும் மறுமை யிலும் துன்பங்களையே தருதலால் அத்தீவினைகள் தீயினும் மிகுதியாக அஞ்சப் படத் தக்கனவாம்.
அறிவினுள் எல்லாம் தலையயன்ப தீய
செறுவார்க்குஞ் செய்யா விடல். (203)
தம்மைப் பகைப்பவர்க்குந் தீமையானவற்றைச் செய்யாது விடுதலை அறிவுச் செயல்கள் எல்லாவற்றுள்ளும் தலையாயது என்பர் அறிவுடையோர்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு. (204)
ஒருவன் பிறனுக்குக் கேடு செய்யும் வினையை மறந்தும் எண்ணாதிருக்க எவனே னும் எண்ணின், எண்ணினவனுக்குக் கேட்டை அறத்தெய்வமே செய்ய எண்ணும்.
இலனென்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து. (205)
எவனேனும் ‘யான் பொருள் இல்லாதவன்’ என்று கருதி அதைப் பெறற் பொருட்டுப் பிறர்க்குத் தீமையானவற்றைச் செய்யாதிருக்க; செய்வானாயின் மீண்டும் வறியவனாவான்.
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான். (206)
துன்புறுத்துந் திறத்தனவாகிய குற்றங்கள் தன்னைப் பின் வந்து வருத்து தலை விரும்பாதவன் தீமை செய்யுந் திறத்தனவாகிய வினைகளைத் தான் பிறரிடத்துச் செய்யாதிருக்க.
எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென் றடும். (207)
எத்துணைப் பெரிய பகையுடையாரும் அதனின்று ஒருவகையால் தப்பு வர்; ஆயின், தீவினையாகிய பகையோ நீங்காது தொடர்ந்து சென்ற இடமெல்லாஞ் சென்று வருத்தும்.
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயா தடியுறைந் தற்று. (208)
பிறர்க்குத் தீமையானவற்றைச் செய்தவர் அவற்றின் விளைவால் தப்பாது கெடுதல் எது போன்றதெனின், ஒருவனது நிழல் அவன் எங்குச் செல்லினும் உடன் சென்று, இருள் வந்த விடத்துக் கண்ணிற்கு மறையினும் மீண்டும் ஒளியில் தோன்றுமாறு, என்றும் அவனை விட்டு நீங்காது அவன் காலடியிலேயே தங்கிய தன்மையது.
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால். (209)
ஒருவன் உண்மையில் தன்னைக் காதலிப்பவனாயின் பிறர்க்குத் தீமை செய்யும் பகுதியயாடு எத்துணைச் சிறிதும் பொருந்தற்க.
அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின். (210)
ஒருவன் செந்நெறியினின்றும் ஒரு பக்கமாக விலகிச் சென்று பிறர்க்குத் தீமை செய்யானாயின் அவன் கேடில்லாதவன் என்பதை அறிந்துகொள்க.
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னுஞ் செருக்கு. (201)
தீவினை என்று சொல்லப்படும் இறுமாப்பிற்குத், தீவினை செய்து பழகிய தீயோர் அஞ்சார்; ஆயின் அதைச் செய்தறியாத சீரியோர் அஞ்சுவர்.
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும். (202)
ஒருவன் தனக்கு இன்பங் கருதிச் செய்யும் தீவினைகள் இம்மையிலும் மறுமை யிலும் துன்பங்களையே தருதலால் அத்தீவினைகள் தீயினும் மிகுதியாக அஞ்சப் படத் தக்கனவாம்.
அறிவினுள் எல்லாம் தலையயன்ப தீய
செறுவார்க்குஞ் செய்யா விடல். (203)
தம்மைப் பகைப்பவர்க்குந் தீமையானவற்றைச் செய்யாது விடுதலை அறிவுச் செயல்கள் எல்லாவற்றுள்ளும் தலையாயது என்பர் அறிவுடையோர்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு. (204)
ஒருவன் பிறனுக்குக் கேடு செய்யும் வினையை மறந்தும் எண்ணாதிருக்க எவனே னும் எண்ணின், எண்ணினவனுக்குக் கேட்டை அறத்தெய்வமே செய்ய எண்ணும்.
இலனென்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து. (205)
எவனேனும் ‘யான் பொருள் இல்லாதவன்’ என்று கருதி அதைப் பெறற் பொருட்டுப் பிறர்க்குத் தீமையானவற்றைச் செய்யாதிருக்க; செய்வானாயின் மீண்டும் வறியவனாவான்.
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான். (206)
துன்புறுத்துந் திறத்தனவாகிய குற்றங்கள் தன்னைப் பின் வந்து வருத்து தலை விரும்பாதவன் தீமை செய்யுந் திறத்தனவாகிய வினைகளைத் தான் பிறரிடத்துச் செய்யாதிருக்க.
எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென் றடும். (207)
எத்துணைப் பெரிய பகையுடையாரும் அதனின்று ஒருவகையால் தப்பு வர்; ஆயின், தீவினையாகிய பகையோ நீங்காது தொடர்ந்து சென்ற இடமெல்லாஞ் சென்று வருத்தும்.
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயா தடியுறைந் தற்று. (208)
பிறர்க்குத் தீமையானவற்றைச் செய்தவர் அவற்றின் விளைவால் தப்பாது கெடுதல் எது போன்றதெனின், ஒருவனது நிழல் அவன் எங்குச் செல்லினும் உடன் சென்று, இருள் வந்த விடத்துக் கண்ணிற்கு மறையினும் மீண்டும் ஒளியில் தோன்றுமாறு, என்றும் அவனை விட்டு நீங்காது அவன் காலடியிலேயே தங்கிய தன்மையது.
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால். (209)
ஒருவன் உண்மையில் தன்னைக் காதலிப்பவனாயின் பிறர்க்குத் தீமை செய்யும் பகுதியயாடு எத்துணைச் சிறிதும் பொருந்தற்க.
அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின். (210)
ஒருவன் செந்நெறியினின்றும் ஒரு பக்கமாக விலகிச் சென்று பிறர்க்குத் தீமை செய்யானாயின் அவன் கேடில்லாதவன் என்பதை அறிந்துகொள்க.
No comments:
Post a Comment