6. வாழ்க்கைத் துணை நலம்
மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. (51)
இல்லறத்திற்கேற்ற நற்குண நற்செய்கைகள் உடையவளாய், தன்னை மணந்து கொண்ட கணவனின் வருவாய்த் தக்கவாறு வாழ்க்கை நடத்துபவள் அவனுக்குச் சிறந்த வாழ்க்கைத் துணையாம்.
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல். (52)
இல்லறத்திற்கு ஏற்ற நற்குண நற்செய்கைகள் ஒருவனுடைய மனைவிடத்திடத்தில் இல்லாவிடின் அவனது இல்வாழ்க்கை வேறு செல்வத்திலும் அதிகாரத்திலும் எத்துணைச் சிறந்ததாயினும் சிறப்புடையதாகாது.
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை. (53)
ஒருவனுடைய மனைவி நற்குண நற்செய்கைச் சிறப்பு உடையவளானால் அவனுக்கு இல்லாதது எது? அம் மனைவி அச்சிறப்பு இல்லாதவளானால் அவனுக்கு உள்ளது எது?
பெண்ணிற் பெறுந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின். (54)
ஒருவன் இவ்வுலகத்திற் பெறக்கூடிய பொருள்களுள் மனைவியினுஞ் சிறந்த தகுதியுடையவை வேறு எவை உள்ளன? அவளிடத்திற் கற்பு என்னும் கலங்கா நிலைமை மட்டும் அமைந்திருக்குமாயின்.
தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யயனப் பெய்யும் மழை. (55)
தான் மணக்கும் முன்பு தொழுது வந்த சிறு தெய்வமாகிய இல்லுறை தெய்வத்தைத் தொழாது தன் கணவன் பாதங்களையே வைகறை யிறுதியில் தொட்டுக் கும்பிட்டெழும் கற்புடை மனைவி பெய்யயன்று சொன்னவுடன் மழை பெய்யும்.
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண். (56)
தன் கற்பையும் உடல்நலத்தையும் காத்து, தன் கணவனையும் உண்டி மருந்து முழுக்கு முதலியவற்றாற் பேணி, தம்இருவரையும் பற்றிய தகுதி வாய்ந்த உலக மதிப்பையும் காத்து, பிறர்க்குச் செய்யும் அறவினை களிலும் தளர்ச்சியில்லாதவள் இல்லறத்திற்குச் சிறந்த பெண்ணாவாள்.
சிறைகாக்குங் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை. (57)
பெண்டிரைக் கணவர் சிறைச்சாலையுள் அடைத்து வைத்தாற் போற் காக்குங் காவல் என்ன பயன்படும்? அப் பெண்டிரே தங்கள் கற்பினால் தங்களைக் காத்துக் கொள்ளுதலே தலையாய காவலாம்.
பெற்றான் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு. (58)
பெண்டிர் தம் கணவனுக்குத் தொண்டு செய்தலைப பெறுவாராயின் தேவர் வாழும் உலகின்கண் அவராற் பெருஞ்சிறப்புச் செய்ய பெறுவர்.
புகழ்புரிந்த இல்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோற் பீடு நடை. (59)
தனக்கும் தன கணவனுக்கும் புகழை விரும்பிய மனைவி இல்லாதார்க்கு, தம்மைப பழித்துரைக்கும் பகைவர் முன் ஆணரிமா போல் இறுமாந்து நடக்கும் பெருமித நடை இல்லை.
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு. (60)
மனைவியின் நற்குண நற்செய்கைச் சிறப்பே இல்லறத்திற்கு மங்கல மாவது. நல்ல அறிவுடை மக்கட் பேறு அதற்கு அணிகலமாவது என்று கூறுவர் அறிந்தோர்.
மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. (51)
இல்லறத்திற்கேற்ற நற்குண நற்செய்கைகள் உடையவளாய், தன்னை மணந்து கொண்ட கணவனின் வருவாய்த் தக்கவாறு வாழ்க்கை நடத்துபவள் அவனுக்குச் சிறந்த வாழ்க்கைத் துணையாம்.
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல். (52)
இல்லறத்திற்கு ஏற்ற நற்குண நற்செய்கைகள் ஒருவனுடைய மனைவிடத்திடத்தில் இல்லாவிடின் அவனது இல்வாழ்க்கை வேறு செல்வத்திலும் அதிகாரத்திலும் எத்துணைச் சிறந்ததாயினும் சிறப்புடையதாகாது.
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை. (53)
ஒருவனுடைய மனைவி நற்குண நற்செய்கைச் சிறப்பு உடையவளானால் அவனுக்கு இல்லாதது எது? அம் மனைவி அச்சிறப்பு இல்லாதவளானால் அவனுக்கு உள்ளது எது?
பெண்ணிற் பெறுந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின். (54)
ஒருவன் இவ்வுலகத்திற் பெறக்கூடிய பொருள்களுள் மனைவியினுஞ் சிறந்த தகுதியுடையவை வேறு எவை உள்ளன? அவளிடத்திற் கற்பு என்னும் கலங்கா நிலைமை மட்டும் அமைந்திருக்குமாயின்.
தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யயனப் பெய்யும் மழை. (55)
தான் மணக்கும் முன்பு தொழுது வந்த சிறு தெய்வமாகிய இல்லுறை தெய்வத்தைத் தொழாது தன் கணவன் பாதங்களையே வைகறை யிறுதியில் தொட்டுக் கும்பிட்டெழும் கற்புடை மனைவி பெய்யயன்று சொன்னவுடன் மழை பெய்யும்.
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண். (56)
தன் கற்பையும் உடல்நலத்தையும் காத்து, தன் கணவனையும் உண்டி மருந்து முழுக்கு முதலியவற்றாற் பேணி, தம்இருவரையும் பற்றிய தகுதி வாய்ந்த உலக மதிப்பையும் காத்து, பிறர்க்குச் செய்யும் அறவினை களிலும் தளர்ச்சியில்லாதவள் இல்லறத்திற்குச் சிறந்த பெண்ணாவாள்.
சிறைகாக்குங் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை. (57)
பெண்டிரைக் கணவர் சிறைச்சாலையுள் அடைத்து வைத்தாற் போற் காக்குங் காவல் என்ன பயன்படும்? அப் பெண்டிரே தங்கள் கற்பினால் தங்களைக் காத்துக் கொள்ளுதலே தலையாய காவலாம்.
பெற்றான் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு. (58)
பெண்டிர் தம் கணவனுக்குத் தொண்டு செய்தலைப பெறுவாராயின் தேவர் வாழும் உலகின்கண் அவராற் பெருஞ்சிறப்புச் செய்ய பெறுவர்.
புகழ்புரிந்த இல்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோற் பீடு நடை. (59)
தனக்கும் தன கணவனுக்கும் புகழை விரும்பிய மனைவி இல்லாதார்க்கு, தம்மைப பழித்துரைக்கும் பகைவர் முன் ஆணரிமா போல் இறுமாந்து நடக்கும் பெருமித நடை இல்லை.
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு. (60)
மனைவியின் நற்குண நற்செய்கைச் சிறப்பே இல்லறத்திற்கு மங்கல மாவது. நல்ல அறிவுடை மக்கட் பேறு அதற்கு அணிகலமாவது என்று கூறுவர் அறிந்தோர்.
No comments:
Post a Comment