29. கள்ளாமை
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு. (281)
கள்வன் என்று பிறரால் இழித்து எண்ணப்படாமையை விரும்புகின்றவன் என்று சொல்லப்படுவான், தன்மனம் எவ்வகைப் பொருளையும் மறைவிற் கவரக் கருதாவகை காத்துக்கொள்க.
உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல். (282)
தீவினைகளைத் தம் நெஞ்சாற் கருதுதலும் துறவறத்தார்க்குக் குற்றமாம். ஆதலால், பிறன் பொருள் எதையேனும் அவன் அறியாமற் கவர்வேம் என்று கருதற்க.
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்
தாவது போலக் கெடும். (283)
களவினால் உண்டான செல்வம் வளர்வது போலத் தோன்றி அளவு கடந்து கெடும்.
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும். (284)
பிறர் பொருளைக் கவர்தலின்கண் ஊன்றிய வேட்கை, அற்றைக்கு நலஞ் செய்வதுபோல் தோன்றிப் பின்பு பயன் விளையுங் காலத்தில் தீராத துன்பத்தை உண்டாக்கும்.
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். (285)
அருளின் அருமை நோக்கிப் பிறரிடத்து அன்புடையராய் ஒழுகுதல் பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ளக் கருதி அவரது சோர்வு பார்ப்பாரிடத்தில் உண்டா காது.
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர். (286)
களவின்கண் ஊன்றிய வேட்கை உடையவர் தமக்குரிய ஒழுக்க வரம்பின்கண் நின்று ஒழுகமாட்டார்.
களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல். (287)
களவாண்மை என்று சொல்லப்படும் இருண்ட அறிவுடைமை எல்லாப் பொருள் களின் இயல்பையும் உள்ளவாறு அளந்து அறியுந் திறமையை விரும்பினவரிடத்து இல்லை.
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்
களவறிந்தார் நெஞ்சிற் கரவு. (288)
பொருள்களின் இயல்பை உள்ளவாறு அறிந்தவரின் உள்ளத்தில் அறம் நிலைத்து நிற்றல் போலக் களவையே பயின்றவரின் உள்ளத்தில் வஞ்சனை நிலைத்து நிற்கும்.
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர். (289)
களவு அல்லாத பிறவற்றை அறியாதவர் வரம்பு கடந்த செயல்களைச் செய்து அப்பொழுதே அழிவர்.
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு. (290)
களவு செய்வார்க்குத் தம்முடனேயே உள்ள தம் சொந்த உடம்பும் தவறும். அது செய்யாதார்க்கு நெடுந் தொலைவிலுள்ள தேவருலகுந்தவறாது கிட்டும்.
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு. (281)
கள்வன் என்று பிறரால் இழித்து எண்ணப்படாமையை விரும்புகின்றவன் என்று சொல்லப்படுவான், தன்மனம் எவ்வகைப் பொருளையும் மறைவிற் கவரக் கருதாவகை காத்துக்கொள்க.
உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல். (282)
தீவினைகளைத் தம் நெஞ்சாற் கருதுதலும் துறவறத்தார்க்குக் குற்றமாம். ஆதலால், பிறன் பொருள் எதையேனும் அவன் அறியாமற் கவர்வேம் என்று கருதற்க.
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்
தாவது போலக் கெடும். (283)
களவினால் உண்டான செல்வம் வளர்வது போலத் தோன்றி அளவு கடந்து கெடும்.
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும். (284)
பிறர் பொருளைக் கவர்தலின்கண் ஊன்றிய வேட்கை, அற்றைக்கு நலஞ் செய்வதுபோல் தோன்றிப் பின்பு பயன் விளையுங் காலத்தில் தீராத துன்பத்தை உண்டாக்கும்.
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். (285)
அருளின் அருமை நோக்கிப் பிறரிடத்து அன்புடையராய் ஒழுகுதல் பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ளக் கருதி அவரது சோர்வு பார்ப்பாரிடத்தில் உண்டா காது.
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர். (286)
களவின்கண் ஊன்றிய வேட்கை உடையவர் தமக்குரிய ஒழுக்க வரம்பின்கண் நின்று ஒழுகமாட்டார்.
களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல். (287)
களவாண்மை என்று சொல்லப்படும் இருண்ட அறிவுடைமை எல்லாப் பொருள் களின் இயல்பையும் உள்ளவாறு அளந்து அறியுந் திறமையை விரும்பினவரிடத்து இல்லை.
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்
களவறிந்தார் நெஞ்சிற் கரவு. (288)
பொருள்களின் இயல்பை உள்ளவாறு அறிந்தவரின் உள்ளத்தில் அறம் நிலைத்து நிற்றல் போலக் களவையே பயின்றவரின் உள்ளத்தில் வஞ்சனை நிலைத்து நிற்கும்.
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர். (289)
களவு அல்லாத பிறவற்றை அறியாதவர் வரம்பு கடந்த செயல்களைச் செய்து அப்பொழுதே அழிவர்.
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு. (290)
களவு செய்வார்க்குத் தம்முடனேயே உள்ள தம் சொந்த உடம்பும் தவறும். அது செய்யாதார்க்கு நெடுந் தொலைவிலுள்ள தேவருலகுந்தவறாது கிட்டும்.
No comments:
Post a Comment